வலைப்பதிவுகளின் திரை விமர்சனம்
புதுப்பிக்கப்பட்ட நேரம் : May 18, 2012, 8:45 pm
சூடான சினிமா இடுகைகள்
சமீபத்தில் எழுதப்பட்ட திரை விமர்சனம்



1996 -இல் நவரச நாயகன் கார்த்திக் மார்க்கெட் இழந்து , நடிப்பதை விட்டுவிட்டு சொந்த ஊர்  போய்விடலாம் என்று முடிவு செய்தபோது ஒரு பட வாய்ப்பு வந்தது. அதை முடித்து விட்டு நம்பிக்கையில்லாமல் கிளம்ப தயாரானபோது, படம் சரவெடி போல படு ஹிட் ஆகி ,கார்த்திக்கை கம்பீரமாக அடுத்த ரவுண்ட் வரவைத்தது. படம் - உள்ளத்தை அள்ளித்தா . இயக்கம் - ...மேலும் வாசிக்க
1996 -இல் நவரச நாயகன் கார்த்திக் மார்க்கெட் இழந்து , நடிப்பதை விட்டுவிட்டு சொந்த ஊர்  போய்விடலாம் என்று முடிவு செய்தபோது ஒரு பட வாய்ப்பு வந்தது. அதை முடித்து விட்டு நம்பிக்கையில்லாமல் கிளம்ப தயாரானபோது, படம் சரவெடி போல படு ஹிட் ஆகி ,கார்த்திக்கை கம்பீரமாக அடுத்த ரவுண்ட் வரவைத்தது. படம் - உள்ளத்தை அள்ளித்தா . இயக்கம் - சுந்தர் சி.

பதினைந்து வருடங்களுக்கு பிறகு 'நடிகர்' சுந்தர் சி ,ஏறக்குறைய அதே நிலைமையில் இருக்க, இயக்குனர் சுந்தர் சி அவரை காப்பாற்றியிருக்கிறார். படம் - கலகலப்பு @ மசாலா கஃபே. நல்ல இயக்குனர் தமிழுக்கு  திரும்ப கிடைத்ததற்கு  மகிழ்ச்சி.

லாஜிக்  என்ற ஒரே ஒரு விதியை தளர்த்திவிட்டு சுந்தர் சி படத்துக்கு போனால் , கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். படம் இரண்டரை மணி நேரம் புன்னகைக்க  - ரசிக்க -விலா நோக சிரிக்க வைக்கிறது.


விமல் - சிவா - சந்தானம் என்று மூன்று நாயகர்கள்.  அப்பாவி நடிப்பில் வழக்கம் போல கிண்டல் கலந்து விமல் கலக்கினால், பஞ்ச் டயலாக் கொடுத்து  அவருக்கு இணையாக கூடிய வரை நடிக்கிறார் சிவா. ஆனால் நடிப்பில் வெல்வது விமல்தான்.

கும்பகோணத்தில் நடக்கும் கதை. அப்பா காலம் வரைக்கும் நன்றாக ஓடிய ஹோட்டல்  டல்லடிக்க தொடங்கியதும் , அதை மீண்டும் முன்னுக்கு கொண்டு வர அவர் படும் பாடும் , ஒவ்வொரு  முயற்சியும் தோற்கும்போதும் அவர் கட்டும் ரியாக்சனும் , இளவரசுவிடம்  கடன்  வாங்கி கட்ட முடியாமல் 
அவரிடம் இருந்து தப்பிக்க போராடுவதும் - நல்ல நடிப்பு.

காமெடி தாண்டி சிவா எந்த படத்திலும் நடிக்க முடியாது என்பதை தெரிந்து , இயக்குனர் அவரை உபயோகபடுத்தியிருப்பது நன்றாக வேலை செய்கிறது. டீக்கடையில் நண்பன் 'மச்சான் உன் ஆளு போறாடா' என்றவுடன் 'அண்ணே..இவனுக்கு மட்டும் ரெண்டு பிஸ்கட் கொடுங்க' என்பதிலிருந்து  விமலிடம் ' கேள்வி கேக்கறது ரெம்ப சுலபம்.பதில் சொல்றதுதான் கஷ்டம். அதுவும் மகாநதி பாக்காதவன்கிட்ட பதில் சொல்லவே முடியாது' என கத்துவதிலும் 'சகோதரர்' என்று விமலை அழைப்பதிலும் -ஹ்ம்ம்  நல்ல முயற்சி சிவா.குறை ஏதும் இல்லை.   

இடைவேளை தாண்டி சந்தானம் வந்ததும் , ஏதோ பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறக்கும்போது ஏற்படும் ஆனந்த கூச்சல் போல தியேட்டர் எங்கும் கைதட்டல் எதிரொலிக்கிறது. 'அவ்வ்வ்ளோ  பெரிய ஜோக் இல்ல இது ' என்ற டயலாக் கூட சிரிப்புக்கு மினிமம் கேரன்ட்டி.
அதிரடி introவுக்கு அடுத்த சீனிலேயே , ' வழக்கம் போல இன்னைக்கும் உங்கள ஒருத்தன் என்ன பத்தி படு கேவலமா பேசியிருப்பானே..அவன் யார்னு போட்டு  கொடுத்தா ஐநூறு ரூபா தருவேன்' ன்னு தன் அக்மார்க் அலம்பலை ஆரம்பித்து விடுகிறார்.



அதுவும்
வள்ளி பட ரஜினி வசனத்தை சொல்லும்
அஞ்சலியிடம் ' ஏன் இத இப்டி சொல்லேன்.நீ விரும்புற பையனை விட உன்னை விரும்பற பையனை கட்டிகோன்னு.' என்று நச் கேள்வி கேட்டு பிறகு உதிர்க்கும் மொட்டைமாடி டயலாக் பின்னுகிறது.இம்சை அரசன் திரும்பி வருவதற்குள் ஒரு நல்ல உயரத்துக்கு போய்விடுவார் சந்தானம்.இவரோடு போட்டி போட்டு கலக்கும் மனோபாலா கேரக்டர் ஸ்கெட்ச் அசத்தல். அவர் கெட்டப் படு பொருத்தம்.

அஞ்சலி , ஓவியா நடிப்பு ஓகே. not  bad.

ஹீரோக்கள் மூன்று பேர் இருந்தாலும் படத்தின் நிஜ ஹீரோக்கள்  திரைக்கதையும் வசனமும்தான். ஹோட்டல் நிகழ்வையும் , வைரம் கைமாறும் கதையையும் சரியாக பொருத்தி அமைத்த விதம் அருமை. வசனங்கள்தான் படத்தின் ஆணிவேர். சுந்தர் சி -  பத்ரி இருவரின் உழைப்பு தெள்ளதெளிவாக தெரிகிறது.  
சுந்தர் சி-யின் 25வது படம் இது.சொல்லும்படியான லேண்ட்மார்க்.  ஒவ்வொரு காட்சியிலும் perfection தெரிகிறது

'அட்டு பிகருக்கு குட்டு பாய்' உட்பட சில வசனங்கள் கேபிள் சங்கரின் கைவண்ணம் என்று நினைக்கிறேன்.திரையுலகில் அவர் பிள்ளையார் சுழி வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது .மகிழ்ச்சி.அவர் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

கடனை திருப்பி  கேட்டு விமலை மிரட்டும் இளவரசுவை ,
சிவா வந்தவுடன் , இன்ஸ்பெக்டரிடம் மாட்டிவிட்டு அவரை பல கெட்டப்களில் ஓட வைக்கும் காட்சிகள் செம கலக்கல். இளவரசு - ஜான் விஜய் - பஞ்சு சுப்பு என எல்லாரும் நிறைவாக செய்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் , ரசிகர்களின் மாறிவரும் ரசனையை உணர்ந்து ,அதற்கு ஈடுகொடுக்கும்  திறமையான  ஒரு குழு இணைந்து , தரமான காமெடி படத்தை கொடுத்திருக்கிறார்கள். தாராளமாக ரசிக்கலாம்.

கலகலப்பு - நல்ல பொழுதுபோக்கு படம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


கலகலப்பு படத்திற்கு உதவி வசனகர்த்தாவாக பணியாற்றினார் கேபிள் சங்கர். இந்தப் படத்தைத் தொடர்ந்து ...மேலும் வாசிக்க


கலகலப்பு படத்திற்கு உதவி வசனகர்த்தாவாக பணியாற்றினார் கேபிள் சங்கர். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களுக்கு வசனம் எழுத வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. வந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் கதை பிடித்திருந்தால் மட்டுமே வசனம் எழுத ஒப்புக் கொள்ளும் கேபிள்சங்கர் இப்போது ஈகோ என்னும் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். ஈஸ்வர் கோமதி என்னும் பெயர்களின் சுருக்கமான ஈகோ என்பதையே படத்தின் டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். நகுலை வைத்து கந்தக் கோட்டை படத்தை இயக்கிய சக்திவேல்தான் ஈகோ படத்தை இயக்குகிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் கதையை சக்திவேல் சொன்ன போது கேபிள்சங்கருக்கு கதை ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம். இவரது வசனங்கள் இயக்குநர் சக்திவேலுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். ஈகோ படத்திற்குப் பிறகு முன்னணி வசனகர்த்தாக்களின் வரிசையில் கேபிள் சங்கர் இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகமேயில்லை என்கிறார்கள் ஈகோ பட டீமினர்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


Hesitating to act because the whole vision ...மேலும் வாசிக்க


Hesitating to act because the whole vision might not be achieved, or because others do not yet share it, is an attitude that only hinders progress.
காந்தியின் வார்த்தைகள் இவை. ’பிறரால் இன்னமும் யோசிக்கப்படவில்லை என்பதாலோ, அல்லது இன்னமும் நடைமுறையில் சாத்தியமில்லை என்பதாலோ ஒரு விஷயத்தில் செயல்பட மறுப்பது, முன்னேற்றத்தைத் தடையே செய்யும்’ என்னும் இந்த வாக்கியத்தோடுதான் ஸ்வதேஸ் ஆரம்பிக்கிறது.

இப்படத்தைப் போன்ற ஒரு படத்தை நான் இந்திய மொழிகளில் இதுவரை பார்த்ததில்லை என்றே சொல்லலாம். எனது கல்லூரியை முடித்த வருடத்தின் மறு வருடத்தில் வெளியான இப்படத்தைப் பார்க்கும் எண்ணமே அப்போது எனக்கு இல்லை. இருந்தாலும், எனது நெருங்கிய நண்பனான பாலு என்னை இழுத்துச் சென்றதாலேயே இப்படத்தைக் கோவை அப்ஸராவில் பார்த்தேன். இப்படத்தைப் பார்க்குமுன்னர் இருந்த ’நான்’ வேறு. இப்படம் பார்த்தபின்னர் இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கும் ’நான்’ வேறு என்று தயக்கமே இல்லாமல் என்னால் சொல்ல முடியும். இதற்குக் காரணம், ரசனை என்ற ஒரு அழகிய உணர்வை என் மனதில் விதைத்தது இந்தப் படம்தான். இப்படம் பார்க்குமுன்னர், வாழ்க்கையின் அழகிய தருணங்கள், அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து வெளிப்படும் சிறிய, ஆனால் அளவில் பெரிய அன்புணர்ச்சி, காதல், கனிவு ஆகிய எந்த உணர்ச்சிகளும் இல்லாமல், ஒரு சாடிஸ்டாக வாழ்ந்துவந்த என் மனதின் கதவுகளை படீரென்று திறந்தது இந்தப் படமே. படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே என் மனதில் நிரந்தரமாக இறங்கிய மாறுதலை மிகத்தெளிவாக என்னால் உணரமுடிந்தது. திரையரங்கை விட்டு வெளியே வரும்போது, முகமெல்லாம் பூரிப்புடன் வந்த எனது ரியாக்‌ஷன் இன்னமும் நினைவிருக்கிறது. நீண்ட வருடங்களாக, எழுதியே ஆகவேண்டும் என்று நான் நினைத்த படம் இது.

இப்படத்தில் காண்பிக்கப்படும் தேசிய உணர்ச்சி, தியாகம் போன்ற எதுவும் அதற்குக் காரணமில்லை. ரஹ்மானின் அருமையான இசையும், அஷுதோஷ் கோவாரிகர் என்ற இயக்குநரின் திரைக்கதையும் மட்டுமே அதற்குக் காரணம். திரைக்கதையில் கொப்பளிக்கும் இனிமை, மகிழ்ச்சி, அன்பு ஆகிய உணர்வுகளின் வெளிப்பாடு, இந்த உணர்வுகளை வெளிக்கொணரும் அருமையான இசை ஆகியவை மட்டுமே காரணம். அந்த உணர்வுகள் நிரந்தரமாக என்னுள் தங்கிவிட்டன. 

அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் படத்தில்?


மோஹன் பார்கவ் என்ற இளைஞன். நாஸாவில் பணிபுரிகிறான். அவன் ஈடுபட்டுள்ள ப்ராஜெக்ட்டின் பெயர் - ‘Global Precipitation Measurement'. உலகின் வளிமண்டலத்தின் ஈர அளவை அப்பப்போது அளப்பதே இந்த ப்ராஜெக்டின் வேலை.

அமெரிக்காவில் மிகவும் வெற்றிகரமான நாஸா வேலையில் இருந்தாலும், பல நாட்களாக அவனது மனதில் முளைவிட்டுக்கொண்டிருந்த ஏக்கம், அவனது தந்தை தாயாரின் நினைவுதினத்தில் (இவனது இரண்டாவது வயதில் விபத்தில் இறந்திருக்கின்றனர் இருவரும்) முழுதாக வெளிவருகிறது. அவனை இந்தியாவில் இரண்டு வயதிலிருந்து வளர்த்த ’காவேரியம்மா’ என்ற பாட்டியின் நினைவில் தவிக்கிறான் பார்கவ். வேலை முக்கியமில்லை; இந்தியா சென்று காவேரியம்மாவை அமெரிக்கா கூட்டிவந்து, தன்னை வளர்த்த பாட்டியை நன்றாகப் பார்த்துக்கொள்வதே பதிலுக்கு செய்யவேண்டிய நன்றி என்ற எண்ணம் அவனது மனதில் வலுப்பட்டுவிடுகிறது. இந்த எண்ணத்தை அவனால் உதற முடிவதில்லை. ஆகவே, பனிரண்டு வருடங்கள் கழித்து, மீண்டும் தில்லி செல்வது என்ற முடிவுக்கு வருகிறான். நாஸாவில் இரண்டு வார விடுமுறை கிடைக்கிறது. திரை இருள, படத்தின் டைட்டில். அட்டகாசமான ரஹ்மானின் பின்னணி இசையுடன். இந்த இசை, பல மாதங்களுக்கு என் செல்ஃபோனில் வீட்டின் நம்பரின் ரிங்டோனாக இருந்தது.

தில்லி. நண்பனுடன் காவேரியம்மா கடைசியாகத் தங்கியிருந்த காந்தி ஆஸ்ரமத்துக்குச் செல்கிறான் மோஹன். ஆனால், பல வருடங்களுக்கு முன்னரே, ஒரு பெண் அங்கே வந்து காவேரியம்மாவைத் தன்னுடனே அழைத்துச்சென்றுவிட்டதாக அவனுக்குத் தகவல் கிடைக்கிறது. காவேரியம்மாவின் கூடவே தங்கியிருந்த பார்தி என்ற பாட்டி, ‘சரண்பூர்’ என்ற கிராமத்துக்கு காவேரியம்மா சென்றுவிட்டதாகத் தெரிவிக்கிறார். அங்கிருந்து மோஹன் கிளம்பும் சமயம், பின்னணியில் பார்தி பாட்டியின் நடுங்கும் குரல் கேட்கிறது -

‘காவேரியம்மா அதிருஷ்டக்காரி. அப்போதும் அவளை அழைத்துச்செல்ல ஆள் இருந்தது; இதோ இப்போதும் யாரோ அவளைத்தேடி வந்திருக்கிறார்கள். என்னைப்போன்ற கிழவிகள் பாவம் செய்தவர்கள். எங்களைத்தேடி யாரும் வருவதில்லை’.

விக்கித்துப்போய் நிற்கிறான் மோஹன். அவனது நண்பன் அவனை அங்கிருந்து அழைத்துச்செல்கிறான்.


புத்தகக்கடை. சரண்பூர் கிராமத்தை மேப்பில் தேடிக்கொண்டிருக்கிறான் மோஹன். அப்போது அவனது காதில் விழுகிறது ஆத்திரமான குரல் ஒன்று. ‘அறிவில்லை? கீழே கிடக்கும் புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருக்கையில், அப்படியே அதன்மேல் நடக்கிறீர்களே’. ஒரு பெண்ணின் குரல். இயற்கையாகவே அந்தப் பக்கம் பார்க்கிறான் மோஹன். மென்மையான பெண். இனிய குரல். பார்த்ததும் காதல் எல்லாம் இல்லை. ஆனால், அந்தப் பெண்ணுடன் பேச வேண்டும் என்ற ஆர்வம் அவனது உள்ளத்தில் எழுகிறது. கடை நண்பனின் கடையாதலால், கௌண்ட்டரில் அமர்ந்துகொண்டிருக்கிறான் மோஹன். அங்கே, எக்கச்சக்கமான பாடபுத்தகங்களை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் வருகிறாள். புத்தகங்களுக்கு பில் போட ஆரம்பிக்கிறான் மோஹன். ஒவ்வொரு புத்தகத்தின் விலையையும் அவன் கால்குலேட்டரில் அழுத்துவதற்கு முன்னரே, சரியாக அத்தனை விலையையும் சொல்கிறாள் அப்பெண்

அப்போது இயல்பாக, தனது பெயர் மோஹன் என்றும், சரண்பூர் கிராமத்தைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் அவன் சொல்ல, அந்தப் பெண்ணின் முகம் இருள்கிறது. கிராமத்துக்கு அவசரமாக வழி சொல்லிவிட்டு, சிக்கறையைக்கூட வாங்காமல் அங்கிருந்து சென்றுவிடுகிறாள் (இந்த முழு ஸீக்வென்ஸிலும் வரும் பின்னணி இசையை கவனியுங்கள். ரஹ்மான், ரீரிக்கார்டிங் மன்னன் என்பது புரியும்).


கேரவேன் ஒன்றை அமர்த்தும் மோஹன், அப்பெண் சொல்லிய வழியில் பயணிக்க ஆரம்பிக்கிறான். முஹம்மது ரஃபியின் இனிய பாடல்களின் துணையுடன். வழி தவறுகிறது. காட்டிலிருந்து நடந்துவரும் ஒரு பரதேசியிடம் வழி கேட்கிறான். வண்டியில் ஏறி அமர்கிறான் பரதேசி.

ஆரம்பிக்கிறது படத்தின் முதல் பாடல். Wat a song !


சரண்பூர். மிகச்சிறிய கிராமம். அங்கிருக்கும் பெட்டிக்கடையில் காவேரியம்மாவின் வீட்டுக்கு வழிகேட்கிறான் மோஹன். அங்கிருந்து ஒரு சிறுவன் வண்டிக்கு முன்னர் ஓடிவந்து வழிசொல்கிறான்.

வீட்டுக்கு வெளியே குழப்பத்துடன் வரும் காவேரியம்மாவின் கண்களை, பின்னாலிருந்து மூடுகிறான் மோஹன். பனிரண்டு வருடங்கள் கழித்து இருவரும் சந்திக்கின்றனர்.

மோஹனின் சிறுவயது தோழியான கீதா என்ற பெண்ணின் வீடுதான் இது என்று மோஹன் தெரிந்துகொள்கிறான். கீதாதான் காவேரியம்மாவை அழைத்துக்கொண்டுவந்திருக்கிறாள். மோஹன் காவேரியம்மாவை மறந்துவிட்டதாகவும், இனிமேல் அவளைப் பார்க்க வரமாட்டான் என்றும் அடிக்கடி சொல்லியும் வந்திருக்கிறாள்.

சிறுவயதில் கீதாவை ‘கித்லி’ என்றுதான் கிண்டல் செய்வான் மோஹன். ஆகவே, மிகச்சிறுவயதில் தோழியாக இருந்த பெண்ணைப் பார்க்கும் ஆர்வமும் அவனுள் சேர்ந்துகொள்கிறது. ஊரின் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறாள் ‘கித்லி’ என்பதைத் தெரிந்துகொள்ளும் மோஹன், எப்படியும் அவள் கண்ணாடி அணிந்து, பிரம்பை வைத்துக்கொண்டு, அனைவரையும் அடிக்கும் ஆசிரியராகவே இருப்பாள் என்று கற்பனை செய்துகொண்டு, பள்ளிக்குச் செல்கிறான். வழியில் படு சுவாரஸ்யமான மனிதர் ஒருவரைச் சந்திக்கிறான். அவர்தான் அந்த ஊரின் போஸ்ட்மாஸ்டர். பயில்வான் சங்கத்தின் தலைவரும் கூட.

பள்ளி. கித்லியின் குரல் மோஹனின் காதுகளை நிறைக்கிறது. ‘மே ச்சல்த்தா ஹூ(ன்)’ என்ற அவளது குரல். அக்குரலை வழிமொழியும் பல குழந்தைகளின் குரல்.

அதே பெண். புத்தகக் கடையில் பார்த்த அதே பெண்! மோஹனின் மனமெங்கும் சந்தோஷம். அவளிடம் பேசுகிறான் மோஹன். தயக்கத்துடன் பேசும் அவளிடம் விடைபெற்றுக்கொண்டு வீடு வருகிறான்.

மெல்ல மெல்ல அந்த கிராமத்தில் வாழப் பழகிக்கொள்கிறான் மோஹன். கீதாவின் வீட்டில் பகலிலும், கேரவேனில் இரவிலும். அந்த ஊரின் பெரிய பிரச்னை, மின்சாரம் இல்லாதது. மின்சாரத்தை நம்பும் பல தொழில்கள் மெல்ல நசித்து வருகின்றன. பஞ்சாயத்து நாட்டாமைகளிடம் பேசுகிறான் மோஹன்.

அன்றைய தினம், தூங்கிக்கொண்டிருக்கும் மோஹனை அவசரமாக எழுப்புகிறாள் காவேரியம்மா. கீதாவைப் பெண் பார்க்க வருகிறார்கள் என்பதே காரணம். மோஹன் அதிர்ச்சியடைகிறான். பெண் பார்க்க வருபவர்கள், கீதாவைப் பணிபுரியக்கூடாது என்று சொல்வதால், அந்த சம்மந்தம் முறிகிறது. ஆனந்தத்தில் நடனமே ஆடுகிறான் மோஹன் (ரகசியமாகத்தான்). ரஹ்மானின் பின்னணி இசை மறுபடியும் அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறது.

கிராமத்தில் பல சிறுவர்கள் பள்ளி செல்வதில்லை. குறிப்பாக, பெண் பிள்ளைகள். அந்த ஊரில், ஹைஸ்கூலும் இல்லை. ஆகவே, போஸ்ட்மாஸ்டரை மூளைச்சலவை செய்து, தனக்கு சப்போர்ட் செய்ய வைக்கிறான் மோஹன். கூடவே, ’மேலாராம்’ என்ற இன்னொரு நண்பன். இந்த மனிதனின் குறியே, அமெரிக்கா சென்று ஒரு தாபா ஆரம்பிக்கவேண்டும் என்பதே. ஆக, இந்த மூவரின் வேலையும், கிராமத்தில் உள்ள அத்தனை பேரையும் சென்று சந்தித்து, அவர்களது குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவேண்டிய அவசியத்தை உணர்த்துவதே. ஆரம்பிக்கிறார்கள் முயற்சியை.

ஆனால், கிராமத்தின் பெரிய பிரச்னை, மேல்ஜாதி - கீழ்ஜாதி வேறுபாடு. குறிப்பாக, மேலாராம் ஒரு தலித். ஆகையால், அவனுடன் சேர்ந்து சுற்றக்கூடாது என்று மோஹனுக்குத் தடை விதிக்கிறது பஞ்சாயத்து. இருந்தாலும் ஒவ்வொருவராக சென்று சந்திக்கிறான் மோஹன். இரண்டு நண்பர்களின் துணையுடன்.

ஊரில் மாதாந்திர சினிமா திரையிடல் நடக்கிறது. மைதானத்தில் பழைய படுதா அமைத்து, ‘யாதோங்கி பாராத்’ (தமிழில் பல்லாண்டு வாழ்க என்று வெளியான படம்) படத்தைத் திரையிடுகிறார்கள். (அமீர்கானின் முதல் படமும் கூட. குழந்தை நடிகராக). வழக்கப்படி பாதியில் மின்சாரம் நிற்கிறது. இந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் பள்ளிக்கல்வியின் அவசியத்தை எடுத்துச்சொல்கிறான் மோஹன். படத்தின் இரண்டாவது அருமையான பாடல்.


அங்கே, ஒரு உணர்ச்சிமயமான சந்தர்ப்பத்தில் கீதாவோடு தனிமையில் உரையாடும் வாய்ப்பு மோஹனுக்கு வாய்க்கிறது. காவேரியம்மாவை தயவுசெய்து அமெரிக்கா அழைத்துச் சென்றுவிடவேண்டாம் என்று மன்றாடுகிறாள் கீதா. அவளது கண்ணீரை முதல்முறையாக உணர்கிறான் மோஹன்.

பக்கத்து கிராமத்தில், கீதாவின் பாரம்பரிய நிலம் இருக்கிறது. அந்த நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் மனிதர், இதுவரை பணம் தரவில்லை என்பதால், மோஹனை அங்கே சென்று பணம் வசூலித்துவரச் சொல்கிறாள் காவேரியம்மா. இந்தப் பயணம்தான் மோஹனின் ஒட்டுமொத்த மனதையும் இந்தியாவின் பக்கம் திருப்புகிறது. இந்தியாவின் ஏழ்மை, படிப்பின்மை, குழந்தைத் தொழிலாளர்கள், வறுமை ஆகியவற்றை உணர்ந்து மனம் கிழிபடுகிறான் மோஹன். இந்த கிராமத்துக்கு எதாவது செய்யவேண்டும் என்று ஒரு உறுதி அவன் மனதில் எழுகிறது. தன்னிடம் பிரியாவிடை பெற்றுச்செல்லும் மோஹனைப் பார்த்தபடியே நிற்கிறாள் கீதா. படத்தின் மூன்றாவது மென்மையான பாடல்.


இதன்பின் மோஹன் என்ன செய்கிறான் என்பதே படம்.

இப்படத்தின் பொதுவான செய்தி - யாராக இருந்தாலும், முயன்றால் முடியாதது இல்லை என்பதே. ஆனால், அதையெல்லாம் விட, இப்படத்தின் ரொமாண்டிக் காட்சிகள் - ஷா ருக் கானுக்கும் கீதாவாக நடித்திருக்கும் காயத்ரி ஜோஷிக்கும் இடையே எழுதப்பட்டிருக்கும் மிக இயல்பான, மென்மையான, அழகான காட்சிகளே என்னைக் கவர்ந்தன. படத்தின் பல தருணங்களில் இருவரும் பேசிக்கொள்ளும் காட்சிகள் உண்டு. இருவரின் நடிப்பும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக, காயத்ரி ஜோஷி. படத்தைப் பார்க்கும் நண்பர்கள், இக்காட்சிகளைத் தவறவிட வேண்டாம்.

படத்தின் மற்ற பாடல்கள் இங்கே.

Ahista Ahista (deleted song) - ரஹ்மானின் இசையிலேயே, பின்னணி இசை இல்லாமல் வெறும் பாடல் மட்டும் ஒலிக்கும் மிகச்சில பாடல்களில் இதுவும் ஒன்று. இரவில் இப்பாடலைக் கேட்கவேண்டும். அவ்வளவு அழகாக இருக்கும்.


Dekho Na - ’பாபா இச்சு தா’ பாடலின் ஹிந்தி வடிவம். தமிழை விட நன்றாக இருக்கும். இப்பாடலிலும் இருவரின் நடிப்பை கவனியுங்கள். இரவில் கேட்கவேண்டிய பாடல்.


Trust me. எனக்குத் தெரிந்து, ஷா ருக் கான் இத்தனை இயல்பாக வேறு எந்தப் படத்திலும் நடித்ததில்லை. அவரது அசட்டு ரியாக்‌ஷன்கள் எதையும் இப்படத்தில் பார்க்க முடியாது. அதேபோல், ரொமான்ஸ் என்பதற்கு உண்மையான அர்த்தம் இப்படத்தில் இருக்கிறது. Before Sunrise, Before Sunset ஆகிய படங்களின் இயல்பான ரொமான்ஸ் காட்சிகள் பார்ப்பது போலவே இப்படத்தைப் பார்க்கையில் உணர்ந்தேன்.

அதேபோல், எப்படி ’லகான்’ படத்தின் மொக்கைக் கதையை ரஹ்மான் தனது இசையாலேயே உயர்த்தினாரோ, அதனைவிட அருமையாக இப்படத்தில் அவர் முழுத்திறமையையும் காட்டியிருப்பதை உணரலாம். பாடல்கள் அபாரம் என்றால், பின்னணி இசை அட்டகாசம் !! ஒவ்வொரு காட்சியிலும் இழைத்து இழைத்து ரஹ்மான் இசைத்திருப்பதை இதில் காணலாம். பின்னணி இசையைத் தவற விட்டுவிடாதீர்கள்.

இந்தப் படத்தைப் பார்த்திராத நண்பர்கள், தாராளமாக நம்பிப் பார்க்கலாம். குறிப்பாக, இரவில் பாருங்கள். மனம் லேசாவதை உணர்வீர்கள்.



Swades - A romantic, passionate ride down memory lane!


பி.கு


1. படத்தில் ஷா ருக் கானின் உடை எனக்குப் பிடிக்கும். படம் முழுவதும் ஜீன்ஸ்+ஷர்ட் என்ற காம்பினேஷனிலேயே அவர் உலவுவார். அவரது அமெரிக்க கதாபாத்திரத்துக்கு அது இயல்பாகவும் இருக்கும். எனது ட்ரஸ்ஸிங் இன்ஸ்பிரேஷன் இந்தக் கதாபாத்திரமே.

2. படத்தின் குட்டிக்குட்டி ரொமான்ஸ் காட்சிகளே இப்படத்தின் உயிர்நாடி. தவறவே விட்டுவிடாதீர்கள்.

3. படத்தில், உண்மையான வட இந்திய கிராமங்களின் கோரமான முகம் காட்டப்பட்டிருக்காது. இருந்தாலும், பார்க்கலாம்.

4. இப்படத்தை, அப்போதைய M TV, சர்வ சிக்‌ஷா அப்யான் என்று கிண்டல் செய்தது.

5. இப்படத்தின் ஹிந்தி, என்னைப்போன்ற தற்குறிக்கும் புரியும்படி இருப்பது இன்னொரு சிறப்பு. இப்படத்தைப் பார்க்க வசனம் தேவையில்லை.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


முன்னாடி இருக்குதடா நம்ம மூக்காயி இட்லி கடை பின்னாலே ருசிக்குமடா இவ சூடான கீரவடை. அடுத்த ஆதீனம் ரெடி! சூப்பர் ...மேலும் வாசிக்க
முன்னாடி இருக்குதடா நம்ம மூக்காயி இட்லி கடை பின்னாலே ருசிக்குமடா இவ சூடான கீரவடை. அடுத்த ஆதீனம் ரெடி! சூப்பர் சிங்கருக்கு உங்கள் குழந்தைகள் ஆடபாட ஏற்ற பாடல்!
அடுத்த ஆதீனம் ரெடி!
தொகையறா
வாழைப்பழம் தோலுரிச்சி பானையில ஊறவச்சி
வாணலியில் ராப்பகலா காச்சி இங்க வச்சிருக்கு
பார்த்தாலே தண்ணி வரும்…ஸ்.. யப்பா.. பாக்குறவன் நாக்குலதான்
பாலாட்டும் அய்யோ தேனாட்டம் அய்யய்யய்யோ வாடைவரும் மூக்குலதான் 

பல்லவி 
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
சும்மா கும்முன்னு ஏறுது கிக் எனக்கு
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
சும்மா கும்முன்னு ஏறுது கிக் எனக்கு
நான் விட்டெறிஞ்சேன் சல்லிய
அட ஊத்திக்கிட்டேன் மில்லிய
நான் விட்டெறிஞ்சேன் சல்லிய
ஊத்திக்கிட்டேன் மில்லிய
குதிரை மேல ஏறி போய் வாங்க போறேன் டில்லியை
சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
சும்மா கும்முன்னு ஏறுது கிக் எனக்கு

சரணம் - 1 
சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும் (12 Bar)
சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும்
சங்கீதம் தேனா வந்தா கூட இங்கிதம் தானா வரும் (தவளை சத்தம்)
அட தவக்களை சத்தம் சகிக்கலை
குட்டை குளத்துலே கத்தி பழகலே
நம்மகிட்ட கத்துக்கோ வாத்தியாரா ஒத்துக்கோ
எத்தனையோ வித்தையை வச்சிருக்கேன் பாத்துக்கோ
உச்சந்தலை கீழுருக்கு உள்ளங்கால் மேலிருக்கு
நிக்கட்டுமா நடக்கட்டுமா...ஹோய்யா..

நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
சும்மா கும்முன்னு ஏறுது கிக் எனக்கு
நான் விட்டெறிஞ்சேன் சல்லிய
அட ஊத்திக்கிட்டேன் மில்லிய
நான் விட்டெறிஞ்சேன் சல்லிய
ஊத்திக்கிட்டேன் மில்லிய
குதிரை மேல ஏறி போய் வாங்க போறேன் டில்லியை
சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
சும்மா கும்முன்னு ஏறுது கிக் எனக்கு

 சரணம் - 2 
முன்னாடி இருக்குதடா நம்ம மூக்காயி இட்லி கடை
பின்னாலே ருசிக்குமடா இவ சூடான கீரவடை
இது மணக்குது என்னை மயக்குது
பசி எடுக்குது பக்கம் இழுக்குது
புத்தம் புது ஆப்பமா தொட்டு கொஞ்சம் பாப்போமா
தின்னுபுட்டு மொத்தமா துட்டு என்ன கேப்போமா
சுட்ட கருவாடிருக்கு வாத்துமுட்டை வறுத்திருக்கு
அடிக்கடி நான் கடிச்சிக்கதான்..ஹோய்யா…

நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
சும்மா கும்முன்னு ஏறுது கிக் எனக்கு
நான் விட்டெறிஞ்சேன் சல்லிய
அட ஊத்திக்கிட்டேன் மில்லிய
நான் விட்டெறிஞ்சேன் சல்லிய
ஊத்திக்கிட்டேன் மில்லிய
குதிரை மேல ஏறி போய் வாங்க போறேன் டில்லியை
சிங்காரி சரக்கு
சும்மா கும்முன்னு ஏறுது
நம்ம சிங்காரி சரக்கு
சும்மா கும்முன்னு ஏறுது
பிப் பி பிப் பி பீ பிப் பிப் பீ
 
Reference: For full details, please see this site.

http://lyrics.lakshmansruthi.com/song_detail_list.php?&id1=&id=93&mode=Language&Language=0

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


தனது படத்தில் யாரை ஹீரோயினாக்க வேண்டும் என்கிற விஷயத்தில் சம்பளத்தை விட ...மேலும் வாசிக்க


தனது படத்தில் யாரை ஹீரோயினாக்க வேண்டும் என்கிற விஷயத்தில் சம்பளத்தை விட குறியாக இருப்பார்கள் சில ஹீரோக்கள். அந்த ஏரியாவில் அஜீத் கொஞ்சம் வீக் என்றே வைத்துக் கொள்ளலாம். ஒரு பொண்ணாயிருந்தா போதும் என்கிற அளவுக்குதான் அவரது தலையீடு இருக்கும். (பட்டும் படாமலும் இருக்கிற அவரது குணத்தை புரிந்து கொண்டுதான் 'திருப்பதி'யில் நுழைந்து அஜீத்துக்கே மொட்டை போட்டார் பேரரசு. அதை இப்போது நினைத்தாலும் அஜீத் ரசிகர்களுக்கு ஜன்னி வரும்) அதற்குப்பின் உஷாரான அஜீத், ஷுட்டிங் விஷயத்தில் தலையை நுழைப்பது இயல்புதானே?

ஆனால் விஷ்ணுவர்த்தன் இயக்கப் போகும் புதிய படத்தில் கதை கேட்டதோடு சரி. ஹீரோயின் விஷயத்தில் மூக்கை நுழைக்கவே இல்லையாம். அதன்விளைவாக இரு நடிகைகளுக்குள் குடுமிப்பிடி வரும்போல தெரிகிறது.

இப்படத்தில் நயன்தாரா மெயின் ரோலை எடுத்துக் கொள்ள, துணைக்கு டாப்ஸியும் இருக்கிறார் என்பது ரசிகர்கள் அறிந்ததுதான். இந்த ரோலுக்கு முதலில் செலக்ட் செய்யப்பட்டவர் ரிச்சா கங்கோபாத்யா. நேரடியாக அவரை சென்னைக்கு வரவழைத்த விஷ்ணுவர்த்தன், டெஸ்ட் ஷுட்டும் எடுத்தாராம். அட்வான்ஸ் கொடுக்கப் போகிற நேரத்தில்தான் டாப்ஸி ஒரு... இந்த செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...



show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தினா மாதிரி சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கு பயந்து ராயல் சேலஞ்சர்க்கு டெல்லி ...மேலும் வாசிக்க
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தினா மாதிரி சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கு பயந்து ராயல் சேலஞ்சர்க்கு டெல்லி I.P.L கப்பை கொடுத்துவிட்டது! 

நான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அல்ல! என்னுடைய சிற்றறிவிற்கு தோன்றியதை எழுதுகிறேன்! அவ்வளவே! நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்!

டெல்லி  நினைத்திருக்கலாம். ஒரு வேளை சென்னை Play Offs-க்கு வந்தால் "தகிடுதத்தத்தில் முனைவர் cum முனிவர்" பட்டம் வாங்கிய தலிவர் இருக்கும் சென்னையில் தான் semifinals மற்றும் finals நடக்கும். ஆதலால், எதற்கு வீன் வம்பு என்று முனையிலே கிள்ளி எறிவோம் என்று மார்க்கலை டெல்லி விளயாட வைக்கவில்லை. நாலு ஓவர் போடமுடியாத ஆட்டக்கார் அல்ல மார்க்கல்! 

As he hold two posts, that have decision making powers of conflicting interests, one could not blame Delhi Daredevils in anticipating the ultimate... Doctoring the pitch to winking the umpires into submission: as what to do and what not to do; அவர் தானப்பா எல்லோருக்கும் Contract கொடுப்பது!

இல்லாவிடில் சாராய சக்ரவர்த்தி டெல்லி முதலாளியின் காதை கடித்திருக்கலாம். ஆளுக்கு பாதி XXX ---XX -ன்னு!  எங்க டீமையும் Play Offs-க்கு வர விடுங்கள் என்று! எவன் கண்டான்! எல்லா I.P.L ஆட்டமும் match fixing தான்!

இந்த எழவு ஒன்றும் தெரியாமல், நம்ம "சென்னை மஞ்ச மாக்கான்கள் சென்னைக்கு விசில் போடராணுங்க!" உங்க முட்டாள்தனம் தான் நடு நெத்தியில் சிகப்பு விளக்கு வைத்திருக்கும் எங்க தலிவரின் மூலதனம்!

தாத்தாவிற்கும் பேரனுக்கும் உள்ள உறவே தனி! என் தாத்தாவின் கடவுள் பக்திக்கு அளவே இல்லை; அப்படி ஒரு பக்திமான். அவர் தான் என்னுடைய ஆன்மீக தேடலுக்கு அடிக்கல் நாட்டியவர். அவர் சொல்வார்: எவனாவது தனது "நடு நெத்தியில் சிகப்பு விளக்கு வைத்து இருந்தால் ஜாக்கிரதையாக இரு! மஞ்ச விளக்கு நடுவில் சிகப்பு விளக்கு இருந்தால் கவனம் அதிகம் வேண்டும்," என்று. 

இந்த காதுக்கும் அந்த காதுக்கும் மூணு பட்டை அடித்து நடுவில் மேலே சொன்ன எல்லா விளக்குகளையும வைத்து இருந்தால், உனக்கு அவர்கள் சகவாசமே கூடாது என்று சொல்வார். இன்றும் அவர் சொல்படி தான் நான் நடக்கிறேன்.

பின்குறிப்பு:
எனக்கு குன்னக்குடி வயலின் பிடிக்கும்; அதை விட, "M.R. விஜயாவின் பாட்டு குன்னக்குடியின் வயலினுடன்" வருவது ரொம்ப ரொம்ப பிடிக்கும்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


காதலில் வெற்றியோ தோல்வியோ ஆனால் ஒவ்வொரு காதலுக்குப் பின்னாலும் பல இழப்புகள் இருக்கின்றன. ...மேலும் வாசிக்க


காதலில் வெற்றியோ தோல்வியோ ஆனால் ஒவ்வொரு காதலுக்குப் பின்னாலும் பல இழப்புகள் இருக்கின்றன. அது உறவாகவும் இருக்கலாம். அல்லது வேறு ஏதோ ஒரு வகையான இழப்பாக இருக்கலாம். பெத்தவங்களோட மிரட்டலுக்கு பயந்து காதலை துறப்பவர்கள்... இழப்புகள் ஏதும் இல்லாமலேயே காதலில் தோற்கிறார்கள். சிலரது காதலோ சில இழப்புகளுக்கு பின்பே வெற்றி பெறுகிறது. சில காதலோ தாங்க முடியாத இழப்புக்குப் பின்னாலும் தோற்றுப் போய்விடுகிறது.

படித்துவிட்டு அப்பாவுக்கு உதவியாக கடையில் இருக்கிறார் ஜெயம் (லகுபரன்). பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் தனத்தின் (சுவாதி) மேல் காதல் வருகிறது. முதலில் தனலட்சுமிக்கு ஜெயத்தைப் பிடிக்காவிட்டாலும் போகப் போகப் பிடித்துவிடுகிறது. காதல் என்றாலே வில்லன் இல்லாமல் இருப்பார்களா? தனலட்சுமியின் குடும்பம் அவர்கள் காதலுக்கு குறுக்கே நிற்கிறது. அவர்களை மீறி தங்கள் காதலில் உறுதியாக நிற்கும் ஜெயமும் தனலட்சுமியும் தங்கள் காதலில் ஜெயித்தார்களா...? என்பது மனதை உருக வைக்கும் க்ளைமேக்ஸ்.

கதை என்று பார்த்தால் சாதாரண கதையாகத்தான் தெரியும். ஆனால் அதை திரைக்கதையாக்கும் போது இன்ட்ரஸ்டிங்கான காட்சிகளுடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தங்கசாமி. காதல், அந்த காதலுக்கு பின்னால் எவ்வளவு இழப்புகள் வேதனைகள் என்று சுட்டிக் காட்டுகிறார் இயக்குநர் தங்கசாமி. படத்தின் துவக்கத்திலேயே நடக்கும் இரட்டைக் கொலைகள் அது நடக்க காரணம் என்ன... என்கிற பாணியில் கதை சொல்லியிருக்கிறார் தங்கசாமி. கொஞ்சம் வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது இவர் கதை சொல்லும் பாணி.


தூத்துக்குடியில் நடக்கும் கதை என்பதால் தூத்துக்குடியில் முழுக்க முழுக்க படம் பிடித்திருக்கிறார்கள். தூத்துக்குடியில் நடப்பது போன்ற காட்சிகளை கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்த போதும் இவ்வளவு டீட்டெயிலான காட்சிகளை கொண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். தூத்துக்குடி துறைமுகத்தை அங்குலம் அங்குலமாக அலசி படம் பிடித்திருக்கிறார்கள். திருச்செந்தூர் கோயில், குலசேகரன்பட்டிணம் என இவர்கள் கேமரா உள்வாங்கிய இடம் ஒவ்வொன்றும் கதையோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. தனலட்சுமி படிக்கும் பள்ளிக்கூடத்தின் பெயர் பலகையைக் காட்டிய போது பள்ளிக் கூடத்தின் பெயரை மறைத்துக் கொண்டு காட்டுவது அதே போல கதாபாத்திரங்கள் தண்ணி அடிக்கும் போது பாட்டிலை மறைப்பது, குடி உடல் நலத்திற்கு கேடு என டைட்டில் போடுவது இது போன்ற காட்சிகள் இயக்குநர் தங்கசாமிக்கு சமூகத்தின் மீது இருக்கும் பொறுப்புணர்வைக் காட்டுகிறது.

படத்தின் முதல் பாதி ஜெயமும் தனலட்சுமிக்கும் காதல் வருவது, காதலை அவர்கள் டெவலப் பண்ணுவது என்று போகிறது. அதே நேரத்தில் ஜெயத்தின் அண்ணன் அசோக்கின் பிஸினஸ், அரசியல் பிரவேசம் குறித்தும் சொல்கிறது காட்சிகள். இடைவேளையின் போது செம பஞ்ச் வைக்கிறார் இயக்குநர். இடைவேளைக்குப் பிறகு காதலர்களுக்கு வரக் கூடிய பிரச்சினை, அதனால் ஏற்படுகிற விளைவுகள் என்று போகின்றன காட்சிகள். ஒவ்வொரு காட்சியையும் உயிரோட்டத்துடன் படைத்திருக்கிறார் இயக்குநர்.

ஜெயமாக நடித்திருக்கிறார் புதுமுகம் லகுபரன். இவர் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாராம். இவரை அசல் தூத்துக்குடி பையனாகவே மாற்றியிருக்கிறார்  இயக்குநர் தங்கசாமி. புதுமுகங்கள் என்று சொல்லிக் கொண்டு ‘நானும்தான் நடிக்கிறேன்’ என்று டார்ச்சர் பண்ணுகிற நடிகர்களுக்கு மத்தியில் தனித்திறமையுடன் லகுபரன் பளிச்சென மின்னுகிறார். இவர் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட கேரக்டருக்கு என்ன தேவையோ அதற்கேற்றார் போல் இயல்பாக இருக்கிறார் என்று சொல்வதே சரியாக இருக்கும். லகுபரரைனப் பார்க்கும் போது நம்ம பக்கத்து வீட்டு பையன் ரமேஷ், சுரேஷ் மாதிரி இருக்கிறது. படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே நம்மை வெகுவாக கவர்ந்துவிடுகிறார் ஜெயம்... சாரி... லகுபரன்.

படத்தில் நம்மை வெகுவாக கவரும் இன்னொருவர் ஜெயத்தின் அண்ணனாக வரும் அசோக். இயக்குநர் தங்கசாமியே இந்த அண்ணன் கேரக்டரில் நடித்திருக்கிறார். சொல்லப் போனால் இந்த கேரக்டர்தான் படத்திற்கே ஹீரோ என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இருக்ம் இந்த கேரக்டர், செம ஷார்ப். ரியலாக ஒரு பெண் கவுன்சிலரின் கணவர் என்னும் போது அவர் எப்படி இருப்பார், என்னென்ன பிஸினஸ் பண்ணுவார்... எப்படி வலம் வருவார்... என்பதையெல்லாம் அசோக் குமார் கேரக்டர் சொல்கிறது. ஜெயத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அசோக் அவன் மீது கோபம் கொண்டு அடிக்கும் கேரக்டர், அப்போது அவன் அப்பா உள்ளே வர அடிப்பதை நிறுத்திவிட்டு போவது... என வீடுகளில் இயல்பாக நடக்கும் சம்பவங்களையே தேடிப் பிடித்து காட்சிகளில் வைத்திருக்கிறார் தங்கசாமி. இந்த இயல்பான காட்சிகளே படத்திற்கு மிகப்பெரும் வலு சேர்க்கின்றன. இவர் நடந்து போகும் போது வெளிப்படும் தோரணை, பேசுற போது இருக்கிற கெத்து... இது எல்லாமே தங்கசாமிக்கு நல்ல படம் இயக்க மட்டுமல்ல ஒரு அண்ணன் கேரக்டராகவே மாறவும் தெரியும் என்பதை காட்டுகிறது. கடைசியில் இந்த அண்ணன் கேரக்டருக்கு ஏற்படும் விபரீத முடிவு நம் கண்களை கலங்க வைத்துவிடுகிறது.

ஜெயத்திற்கு ஜோடியாக தனலட்சுமி கேரக்டரில் நடித்திருக்கிறார் சுவாதி. பொதுவா கேரள நடிகைகள் என்றாலே செமையாகத்தான் இருப்பார்கள். அப்படியிருக்கும் போது சுவாதி பற்றி சொல்லவா வேணும். அழகிலும் நடிப்பிலும் நாற்பது கேரள நடிகைகளை சேர்த்து செய்த மாதிரி தெரிகிறார் சுவாதி. தனலட்சுமி கேரக்டருக்கு நல்லாவே பொருந்தியிருக்கிறார் சுவாதி. ‘ஒரு பையன் என்னை லவ் பண்றேன்னு சொல்றாண்டி...’ என்று சொல்லும் அப்பாவி சுவாதி நம்மை அறியாமலே நம்மை தன் வசப்படுத்திக் கொள்கிறார். ‘கல்யாணம் பண்ணினா அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்...’ என்று இவர் துணிச்சலாக பெற்றோரிடம் பேசும் போது சபாஷ் போட வைக்கிறார்.

சுவாதிக்கு அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறார் எலிசபெத். தன் பொண்ணு யாரோ ஒரு பையனை லவ்வுகிறார் என்னும் போது மகளை நினைத்து பயப்படும் இவர், மகன் விபத்தில் சிக்கிக் கொள்ள அதிலிருந்து மகளை படாத பாடு படுத்துவது தனத்துக்காக நம்மை உச் கொட்ட வைக்கிறது. டீன் ஏஜ் மகளிடம் எப்படியெல்லாம் அணுகக் கூடாது என்பதற்கு தனத்தின் அப்பா அம்மா கேரக்டர் நல்ல ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. தனத்தின் மாமாவாக வரும் அந்த அட்வகேட், தனத்தின் காதலை அவள் வீட்டிலும் ஜெயத்தின் வீட்டிலும் சொல்லும் போது வித்தியாசமான அப்ரோச்சில் மெச்ச வைக்கிறார்.

காமெடி நடிகர் என்று யாரும் படத்தில் இல்லாவிட்டாலும் ஜெயத்தின் நண்பன் பானை சேகராக வரும் அஜய் அடிக்கடி கிச்சுகிச்சு மூட்டுகிறார். அதுவும் இவர் ஒரு பொண்ணுக்கு ரூட் விட அந்த பெண்ணோ ஜெயத்தை ரூட் விடுகிற காட்சிகள் ஏகப்பட்ட கலகலப்பு.

படம் துவங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே நம்மை உட்கார்ந்த இடத்திலேயே தூத்துக்குடிக்கு அழைத்துப் போய்விடுகிறது கேரமா. தொழில் நகரமான தூத்துக்குடியின் கலரான முகமும் கலங்கலான முகத்தையும் ஒருசேர படம் பிடித்துக் காட்டியிருக்கிறது ராஜ்சுந்தரின் கேமரா.

இசையமைப்பாளர் மனு ரமேஷன் தேவையான இடத்தில் பின்னணி இசையை பயன்படுத்தியிருக்கிறார். ‘ஏத்து ஏத்து’ பாடல் தூத்துக்குடியின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டுகிறது. ‘அசத்தும் அழகு...’ இந்த வருடத்தின் டாப் மெலடி பாடல்களில் தனி இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘ஏலே ஏபுள்ள...’, ‘ஏனோ என் இதயம்’ பாடல்களும் ரசிக்க வைக்கும் ரகம். ‘யாக்கை சுற்றும் ராட்டினம்’ பாடல் கம்பீரம். 

ராட்டினத்தை இயக்கிருப்பவர் தங்கசாமி. இவருக்கு இது முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். புதுமுங்களை வைத்து இப்படி ஒரு படத்தை ஜீரணிக்கவே முடியாத ஒரு க்ளைமேகஸை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். ரியல் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் திரையில் நடமாடவிட்டிருக்கிறார் இயக்குநர் தங்கசாமி. நம் ஒவ்வொருவருக்குள் இருந்தும் ஓரிரு காட்சிகளை எடுத்து படமாக்கியிருப்பதாலோ என்னவோ படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் தியேட்டரை விட்டு வெளியே வந்த பின்னும் அசைபோட வைக்கின்றன. புதுமுகங்களை வைத்துப் படம் எடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அட்டு படங்களாக எடுத்து ரசிகர்களை சாகடிக்கும் இயக்குநர்கள் ராட்டினம் இயக்குநர் தங்கசாமியிடம் கொஞ்சம் டியூஷன் எடுத்துக்கிட்டா பரவாயில்லை...

உங்கள் காதலுக்காக ‘போராடி’ ஒருவேளை நீங்கள் தோற்றிருந்தால் ராட்டினம் உங்கள் மனதில் இருந்து என்றுமே அகலப் போவதில்லை. ஒருவேளை காதலில் போராடி ஜெயித்திருந்தால் சில நாட்களுக்கு உங்களை இந்த ராட்டினம் தூங்கவிடாமல் செய்யும் என்பது மட்டும் உறுதி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


புதுமணத் தம்பதிகள் சினேகா - பிரசன்னாவை தன் வீட்டுக்கே வரவழைத்து திருமணப் பரிசு வழங்கினார் சூப்பர் ஸ்டார் ...மேலும் வாசிக்க

புதுமணத் தம்பதிகள் சினேகா - பிரசன்னாவை தன் வீட்டுக்கே வரவழைத்து திருமணப் பரிசு வழங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.


கடந்த மே 11-ம் தேதி நடந்த தங்கள் திருமணத்துக்கு வருமாக சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தனர் சினேகாவும் பிரசன்னாவும். ஆனால் ரஜினியால் இந்த திருமணம்
மேலும் படிக்க »
None

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


சி றுவயதில் பள்ளிக்கூடத்தில் ஒரு சிறிய தவறுக்காக ஆசிரியை ஒருவரிடம் மிக ...மேலும் வாசிக்க

சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் ஒரு சிறிய தவறுக்காக ஆசிரியை ஒருவரிடம் மிக மோசமாக அடிவாங்கி, கைகள் கன்றிப்போய், அடிப்பதற்குப் பயன்படுத்திய தடியில் சிறு முட்கள் போல இருந்தவை கீறி ரத்தம் கசிந்தபோது, அதிர்ச்சியாகப் பார்த்த ஆசிரியர் ஒருவர் சக ஆசிரியரிடம் கூறியது - 'பிஞ்சுக்கையை எப்பிடி அடிச்சிருக்கா பார்', 'கல்யாணம் ஆகாததுதான் அவவின்ர பிரச்சினை!'

தின்ம வயதுகளில் நண்பர்களுடன் பள்ளியைக் கட் அடித்து அருணாச்சலம் பார்க்க, எங்களுடன் அன்பாகப் பழகும், அமைதியான ஆங்கில ஆசிரியை நாங்கள் கட் அடித்து ப்ளூ பிலிம் பார்த்ததாக வதந்தியொன்றைக் கிளப்பிவிட, வீண்பழி கேட்ட கோபத்தைவிட, மன உளைச்சலும், அதையும் தாண்டி இவரா இப்படி என்ற அதிர்ச்சியுடன் பேச்சற்று நின்றவேளையில், எங்களுடன் நட்புடன் பழகும் ஒரு தமிழாசிரியர் சொன்னது - 'விடுங்கடா பாவம் அது கல்யாணம் கட்டேல்லத்தானே அதுதான் அப்பிடி!'

முதல் வேலை - அலுவலகத்தில் ஆண்களுக்கிடையில், ஐம்பது வயதுப் பெண்மணி ஒருவர் - திருமணமாகாதவர். எடுத்ததற்கெல்லாம் வீண்வாதம். எப்போதும் ஆண்கள் சொல்வதையெல்லாம் எதிர்க்கவேண்டும் என்ற தன்முனைப்போடு. பல வினோதமான பழக்க வழக்கங்கள் அவருக்கு இருந்தன. அவர் எங்களையெல்லாம் அலட்சியமாக பார்ப்பதும், நாங்கள் எங்களுக்குள் சிரித்துக் கொள்வதுமாக...சிலவேளைகளில் அவரை நினைத்தால் மிகப் பரிதாபமாகவும் இருக்கும்! அதற்கும் காரணமாக திருமணம் செய்யாததையே கூறிக் கொண்டார்கள்.

அவர்களெல்லாம் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கான காரணம் தெரியாது. ஒரு விதமான பாதுகாப்பின்மையை உணர்வது, துணையின்றிய வெறுமையான உணர்வு, தம்மைச்சுற்றித் தாங்களே போட்டுக்கொண்ட எல்லை, தனிமை போன்றவை அவர்களின் வினோதமான செயல்களுக்கும், மூர்க்கத்தனமான அணுகுமுறைகளுக்கும் காரணமாக அமைந்திருக்கலாம்.

ரிக்காவிடம் என்ன பிரச்சினை?

ஒருவனுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கிறது. நன்றாகவும் வரைகிறான். தொடர்ந்து பயிற்சி செய்கிறான். எதிர்காலத்தில் மிகச்சிறந்த ஓவியனாக வரலாம். வராமல் போகலாம்.

இதே அவன்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப் பட்டால்? நீ பிக்காசோ மாதிரி வரவேண்டும் எனக் கூறி, அவனது ஏனைய தேவைகள், சுதந்திரம், ஆசைகள் மறுக்கப்பட்டு, எந்நேரமும் ஓவியம் வரைவதில் ஈடுபடுத்தப்பட்டால் என்னவாகும்? அதிக பட்சம் ஒரு ஓவிய ஆசிரியனாக வரமுடியும்... மன நிலை பாதிக்கப்படாவிட்டால்!



எரிக்கா - அவள் அம்மாவால் இன்னொரு பீத்தோவனாக உருவாக்க ஆசைப்பட்டு.....இசைக் கல்லூரி ஒன்றின் பியானோ பேராசிரியையாக இருப்பவள்.

அவளின் அந்தந்த வயதுக்கேற்ற ஆசைகள், தேவைகள் மறுக்கப்பட்டவள். அப்படி அடக்கப்பட்ட ஆசைகள், தேவைகள் திடீரென வெடித்துக் கிளம்பும்போது எப்படி வெளிப்படும்? அது சாதாரணமானவர்களைப் போல் இயல்பானதாக இருக்குமா? அதை மற்றவர்களால் புரிந்துகொள்ள ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஆண்கள் யாரையும் மதிக்ககாமல்,மரியாதையாகத் தலையசைப்பவர்களையும் அலட்சியப்படுத்தும், தனது மாணவன் ஒருவன் புத்தகக்கடை ஒன்றில் செக்ஸ் புத்தகம் ஒன்றைப் பார்ப்பதைக் கவனித்து, தனது வகுப்பறையில் வைத்து மிகக் கோபமாகக் கண்டிக்கும் எரிக்கா நெட் கபே போன்ற ஒரு இடத்திற்குச் செல்கிறாள். மூடப்பட்ட சிறிய கேபின்கள் முன் ஆண்கள் சிலர் காத்திருக்க, அவற்றில் ஒன்றின் முன் எரிக்கா காத்திருக்கிறாள்.

அங்கே நிற்கும் ஒரே பெண் எரிக்கா. ஒரு மாதிரியாக எரிக்கவைப் பார்க்க அவள் கண்டு கொள்ளவில்லை. உள்ளே இருந்த ஆண் வெளியே வந்ததும் , உள்ளே சென்று அமர்கிறாள் டீ.வி திரையில் நீலப்படம்! அது ஒரு நீலப்படம் பார்க்கும் இடம். கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும் எரிக்கா, என்ன செய்வதென்றே தெரியாத ஒரு குழம்பிய நிலையில் மேசைமீது கசக்கிப்போடப்பட்ட ஒரு டிஷ்யூவை பார்க்கிறாள். அது முதல் அங்கு வந்த ஆண், சுய இன்பத்தின்பின் துடைத்துப்போட்ட டிஷ்யூ. முத்துவாக அதை எடுத்து முகர்ந்து பார்க்கும் எரிக்கா, பின்பு மீண்டும் மீண்டும் வெறித்தனமாக முகர்ந்து கொள்கிறாள்.

அங்கிருந்து வரும் வழியில் எரிக்கா நிறுத்தியிருக்கும் ஒரு காரின் அருகே சென்று கண்ணாடி வழியே பார்க்க, உடலுறவு கொள்ளும் ஜோடி ஒன்றைக் காண்கிறாள். அவள் பார்ப்பதை அந்தப் பெண் கண்டுவிட, தனது உணர்வுகள் கிளர்ந்துவிட்ட நிலையில் ஏதோ ஒரு வடிகாலாக நினைத்து அங்கிருந்து நகரும் எரிக்கா அவர்கள் முன்னால் சிறுநீர் கழிக்கிறாள். காரிலிருந்து அவர்களிறங்க, அங்கிருந்து ஓடுகிறாள் எரிக்கா.  

அவளிடம் பியானோ கற்றுவரும் பதினேழு வயது இளைஞனான வால்டரின் திறமை காரணமாக அவனைக் கவனிக்கிறாள் எரிக்கா. அவனிடம் சிநேகமாகப் பழகுகிறாள். அவர்களுக்கிடையிலான சிநேகம் பரஸ்பரம் ஈர்ப்பாக மாற, உடலாலும் இணைந்து கொள்ள..அங்கே ஆரம்பிக்கிறது பிரச்சினை! 

எரிக்கா sadomasochism  எனும் மனநிலைப் பாதிப்புக்குள்ளானவள். Sadism - பிறரைத் துன்புறுத்தி இன்பம் காண்பவர்கள், sadomasochism (Sadism + masochism) அதே வேளையில் தமது வலிகளின் ஊடாகவும் ஒருவகை இன்பத்தைப் (??) பெற்றுக் கொள்பவர்கள். மென்மையான உணர்வு கொண்ட வால்டருக்கு, எரிக்காவின் நடவடிக்கைகள் பெரும் சித்திரவதையாக அமைகின்றன.

எரிக்காவின் கல்லூரியில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. அங்கு வரும் திறமையான, மாணவி அன்னா, வால்டருடன் சிநேகமாகப் பழகுவது எரிக்காவுக்குப் பிடிக்கவில்லை.அதே நேரம், அன்னாவைப் பார்க்கும்போது, தன்னையே பார்ப்பதுபோல எங்கே அவளும் தன்னைப் போல ஆகிவிடுவாளோ என்ற அக்கறை கலந்த பயமும் ஏற்படுகிறது. அன்னாவின் 'கோட்' போகட்டுக்குள் உடைந்த கண்ணாடித் தூளைப்போட்டு அவளின் கைகளைக் காயப்படுத்துகிறாள். இது வால்டருக்கும் தெரிந்துவிடுகிறது!

எரிக்காவின் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளால் மேன்மேலும் நொந்து போக என்னவாகிறது... (ஸ்ஸ்..ஸப்பா முடியல)

சில காட்சிகளைப் பார்க்க முடியவில்லை. படமே இப்படி இருந்தால் கதை எப்படி இருக்கும்? 2004 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற novel ஐ அடிப்படியாகக் கொண்டு எடுக்கப்பட படம் இது.

இயக்கம் -  Michael Haneke
மொழி - French
விருதுகள் - Cannes(2001), German film awards(2002), European Film Academy (2001), French Academy of Cinema(2001) இன்னும் ஏராளம். Bafta உள்ளிட்ட பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எஸ் ஆர் எம் கல்லூரி நிறுவனர் திரு பச்சை முத்து அவர்களால் தொடங்கப்பட்ட ‘புதிய தலைமுறை’ பத்திரிக்கை பரவலாக பெரும்பாலானோரின் கவனத்தை ...மேலும் வாசிக்க


எஸ் ஆர் எம் கல்லூரி நிறுவனர் திரு பச்சை முத்து அவர்களால் தொடங்கப்பட்ட ‘புதிய தலைமுறை’ பத்திரிக்கை பரவலாக பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது. திறமைசாலிகளுக்கு மதிப்புக் கொடுத்த காரணத்தால், நல்ல கட்டுரைகள் வெளிவந்தன. ஆரம்பத்தில் நல்ல விஷயங்களோடு வெளியான பத்திரிக்கை, போகப் போக சலிப்புத் தட்ட ஆரம்பித்து விட்டது. காரணம் புரியாமல் குழம்பிய போதுதான், புதிய தலைமுறை சாட்டிலைட் செய்திச் சானல் வெளிவந்தது. பத்திரைக்கை பத்தோடு பனிரெண்டானது. டிவி சானல் எல்லோரும் சன் டிவியை விட அருமையாக இருக்கிறது என்று புகழ்ந்தார்கள். ஆனால் எனக்கொன்றும் அவ்வளவு பிரமாதமாய் இருப்பது போல தெரியவில்லை. இந்தச் சானலில் அதிகப் பிரசங்கித் தனமான செய்திகளும், சும்மா ஒப்பேற்றுவது போல நிகழ்ச்சிகளும், எல்லாம் தெரிந்த மேதாவித்தனமான வார்த்தைப் பிரயோகங்களும் வெளிப்பட்டன. 

எந்த ஒரு செய்திக்கும், நிகழ்ச்சிக்கும் நிறைவு என்ற ஒன்று உண்டு. அதை இவர்கள் கொடுக்கவே இல்லை. சானலில் வெளியாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நிறைவற்ற தன்மையைக் காணலாம். மேலும் இவர்கள் அரசியல் பின்புலம் அற்றவர்கள் என்று காட்ட முயற்சிக்கின்றார்கள். இந்தச் செய்தி சானலை உலகப் புகழ் பெறும் வகையில் நடத்தலாம். ஆனால் அதற்கான எந்த ஒரு முஸ்தீபும் புதிய வடிவும், நிகழ்ச்சிகளும் இதுவரை வரல்லை. 

இந்தப் பக்கமும் இல்லை அந்தப் பக்கமும் இல்லை நடு நிலை என்கிறார்கள்.’ஒப்புக்குச் சப்பாணி’ என்று தானே அர்த்தம் வரும். எது வரினும் உண்மையை உரக்கச் சொல்வோம் என்று புதிய தலைமுறை செய்திகள் வெளியிடாதவரை இதுவும் ஒரு சானலாகத்தான் இருக்கும். 

நேற்று நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் சொன்னார். தமிழ் சினிமாவில் அவ்வப்போது சிலர் வருவர். அவர்களால் இண்டஸ்ட்ரி புத்துணர்ச்சி பெற்று பலருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும். சினிமா உலகினர் சுறுசுறுப்பாய் உழைப்பர். திமுக குடும்பம் சினிமாவில் ஈடுபட்ட காரணத்தால் தமிழ் சினிமா உலகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. அதே போல டாக்டர் சீனிவாசன், ரித்தீஷ் போன்றோரால் நிறைய தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. காசைப் பற்றியோ, படத்தின் தரம் பற்றியோ கவலைப்படாமல் இவர்களைப் போன்றோர் எடுத்து தள்ளிய சினிமாக்களினால்  சினிமா தொழிலாளர்கள் இரவும் பகலும் உழைத்தார்கள். இப்படிப் போன்றோர் தமிழ் சினிமாவிற்கு அடிக்கடி வந்து செல்வர். அது போன்றே தமிழ் சினிமா உலகில் எஸ் ஆர் எம் க்ரூப்பும் ஈடுபட இருக்கின்றார்களாம்.

சானல்கள் இல்லாத காலத்தில் படம் நன்றாக இல்லையெனில் தயாரிப்பாளார் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு சாலையில் போக வேண்டியதுதான். ஆனால் தற்போது டிவி சானல்கள், எஃப் எம் ரேடியோக்கள், வெளி நாட்டு உரிமை, டப்பிங் உரிமை, வேற்றுமொழி உரிமை என்கிற பல்வேறு விஷயங்களினால் போட்ட காசுக்கு பங்கம் வந்து விடாமல் பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருந்து தப்பிக் கொண்டனர். திமுக ஆட்சியில் இருக்கும் போது அரசியல் அதிகார பலத்தால் சன் டிவியும், கலைஞர் டிவியும் தாங்கள் விரும்பிய விலைக்கு திரைப்படங்களை வாங்கினார்கள் என்கிறார்கள். திமுக ஆட்சியின் முடிவிற்குப் பிறகு தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீ ஆரோக்கியமானதாக மாறி இருப்பதாகவும் பேசிக் கொள்கின்றார்கள். பெரும் பணத்தினை முதலீடுகளாய் போட்டு திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு மேலும் பல தமிழ் சாட்டிலைட் சேனல்கள் வருவது மன ஊக்கத்தினை தரும். போட்டி அதிகமிருக்கும் இடத்தில் நல்ல விலை கிடைக்கும் அல்லவா? 

சன், ராஜ், விஜய், கலைஞர், ஜெயா டிவிக்களின் சாட்டிலைட் உரிமைக்கான போட்டிக்கு மேலும் ஒரு சாட்டிலைட் சேனல் வரப்போகின்றதாம். எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் “வேந்தர் தொலைக்காட்சி” விரைவில் மலர இருக்கின்றதாம்.அவர்கள் பெரும் விலை கொடுத்து அரவான் திரைப்படத்தை வாங்கி இருப்பதாகவும், சகுனி படத்தின் விநியோக உரிமையுடன் சாட்டிலைட் உரிமையையும் வாங்கி இருப்பதாகவும் தமிழ் சினிமா உலகிலும், பத்திரிக்கை உலகிலும் பேசிக் கொள்கின்றார்கள். விரைவில் புதிய தலைமுறை செய்திச் சானலில் இது பற்றிய விளம்பரங்கள் வெளியாகலாம். 
திரைப்பட விநியோகஸ்தராகவும், டிவி சானல்களாகவும் மாற இருக்கும் ‘புதிய தலைமுறை’ குழுமத்தினர் வெற்றி வாகை சூட வாழ்த்துகிறேன்.

- ப்ரியங்களுடன் 
கோவை எம் தங்கவேல்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


பள்ளி மாணவனோ மாணவியோ காதலிப்பது போன்ற படங்களாக இருந்தால் நம்மை அறியாமல் அந்த ...மேலும் வாசிக்க


பள்ளி மாணவனோ மாணவியோ காதலிப்பது போன்ற படங்களாக இருந்தால் நம்மை அறியாமல் அந்த படத்தின் மீது ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக தனுஷின் 3 துவங்கி ஏராளமான படங்களை இந்த வரிசையில் அடுக்கிக் கொண்டே போகலாம். ராட்டினம் படத்திலும் இது போன்ற ஒரு காதல்தான். ஆனால் வெறுப்பு வரவில்லை. அதற்கு பதிலாக படம் மீதும் அந்த கதாபாத்திரங்கள் மீதும் மிகப்பெரிய ஒரு மதிப்பு வருகிறது. ஹீரோ அப்பாவுக்கு உதவியாக கடையில் இருக்கும் பையன். ஹீரோயின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. இப்படி ஒரு கதையென்றாலே அதற்குள் எப்படியெல்லாம் லாஜிக்கை கெடுக்க முடியுமோ அப்படியெல்லாம் கெடுப்பார்கள் நம் இயக்குநர்கள். ஆனால் ராட்டினம் படத்தின் இயக்குநர் தங்கசாமியோ படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் மீதும் தனி மதிப்பு மரியாதையையே வர வைத்துவிடுகிறார். அறிமுக இயக்குநர்கள் வரிசையில் தங்கசாமிக்கு என ஒரு சிவப்புக் கம்பள விரிப்பே கொடுக்கலாம். இந்தப் படத்தைப் பார்த்த எஸ்கேப் மோஷன் பிக்சர்ஸ் மதன் அடுத்தப் படத்தை தங்கசாமியையே இயக்கச் சொல்லியிருக்கிறாராம். யு ஆர் வெரி கிரேட் தங்கசாமி. நல்ல படத்தை உருவாக்குவதில் இவரு தங்கசாமி இல்ல... goldgod. உங்ககிட்ட இருந்து ராட்டினம் மாதிரியான நல்ல படங்களை எதிர்பார்க்கிறோம். ராட்டினம் என்னும் நல்ல படத்தைக் கொடுத்ததற்காக தங்கசாமிக்கு எமது நன்றிகள்.

ராட்டினம் விமர்சனம் விரைவில்...

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் எழுதிய ‘ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!’ என்ற ...மேலும் வாசிக்க

விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் எழுதிய ‘ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!’ என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து, 2 லட்சம் பிரதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஊடகத்துறையில் கோபிநாத் என்ற பெயரை விட நீயா நானா கோபிநாத் என்ற பெயர்தான் பிரபலம். அந்த அளவிற்கு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது அந்த நிகழ்ச்சி. ஒரு டாக் ஷோ எப்படி இருக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.
தான் நிகழ்ச்சி நடத்துநர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர் என்பதையும் தனது நூலின் வாயிலாக நிரூபித்துள்ளார் கோபிநாத். அவர் தனது அனுபவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் தனது எழுத்துக்களில் வடித்துள்ளார்.

2007ம் ஆண்டு தனது முதல் புத்தகமான ‘ தெருவெல்லாம் தேவதைகள்’ என்ற நூலை எழுதினார். அதைத் தொடர்ந்து எழுதிய ‘ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க !’ என்ற நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் பதிப்பிக்கப்பட்டது.
தற்போது அந்த நூல் 16வது முறையாக பதிப்பிக்கப்பட்டு 2 லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. அந்த புத்தகம் அனைவரும் கவர முதல் காரணம் அதன் தலைப்பே அதை வாங்கத் தூண்டுவதாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தை வாசித்தால் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் ஏற்படுவதாக கூறுகின்றனர் வாசகர்கள்

.-பென்னிசெல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


சமீபத்தில் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்று ஒரு படம் ரிலீசானது நினைவிருக்கிறதா. படம் ...மேலும் வாசிக்க


சமீபத்தில் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்று ஒரு படம் ரிலீசானது நினைவிருக்கிறதா. படம் தியேட்டரில் நாலு நாட்கள் கூட ஓடவில்லையே. அப்புறம் எங்க ஞாபகம் இருக்கும். இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் சேரனின் உதவியாளர் ஷண்முகராஜ். புதிய முயற்சியாக முகமே தெரியாமல் இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியை படம் பிடித்திருந்தார்கள். முதல் இரவு பாடல் அது என்றாலும் வித்தியாசமாகவே இருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த சேரன் படத்தை ஆகா ஓகோ என்று புகழ்ந்து படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை படம் பார்க்க வைத்திருக்கிறார். ‘செம படம்... சூப்பரா ஓடும்...’ என உசுப்பேத்திவிட மைக்கேல் ராயப்பனும் நம்பி படத்தை வாங்கி வெளியிட்டார். ‘இந்தப் படத்தைப் பார்த்தால்தான் காதலர்கள் ஜெயிக்க முடியும், காதலில் ஜெயிக்க பாலோ பண்ண வேண்டிய 5 டி என்ன என்று இதில் சொல்லியிருக்கிறோம்...’ என்று விதவிதமாக விளம்பரம் செய்த போதும் படம் செல்ப் எடுக்கவில்லை. ‘என் கம்பெனி பேர்ல படத்தை ரிலீஸ் பண்ணித்தரேன்... கலெக்க்ஷன் ஆகஆக பணத்தை கொடுத்திடுறேன்’  என்னும் ஒப்பந்தத்துடன் படத்தை ரிலீஸ் பண்ணியிருக்கிறார் மைக்கேல் ராயப்பன். எனினும் இந்தப் படத்தை வெளியிட்ட வகையில் மைக்கேல் ராயப்பனுக்கு நஷ்டம்தான் மிஞ்சியிருக்கிறது-

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடந்த ஒரு மாதமாக நான் பல உறவினர் வீடுகளுக்கு/விசேஷங்களுக்கு செல்ல நேர்ந்தது. அத்தை பெண்கள், பெரியம்மா/சித்தி பெண்கள் மற்றும் மதினி, மைத்துனி வகையறாக்கள் எல்லோருமே பொதுவாக ...மேலும் வாசிக்க
கடந்த ஒரு மாதமாக நான் பல உறவினர் வீடுகளுக்கு/விசேஷங்களுக்கு செல்ல நேர்ந்தது. அத்தை பெண்கள், பெரியம்மா/சித்தி பெண்கள் மற்றும் மதினி, மைத்துனி வகையறாக்கள் எல்லோருமே பொதுவாக சொன்ன விஷயம்


 “இப்பல்லாம் குடும்பத்தோட பார்க்குற மாதிரியா படம் வருது, என்னேரமும் ஹீரோ குடிக்கிறான், தம் அடிக்குறான், பரட்டத்தலை, தாடியோட திரியுறான்”

 அவர்கள் கவலை அவர்களுக்கு, எல்லோருக்குமே பதின்ம வயதில் பையனோ பெண்ணோ இருக்கிறார்கள். அவர்கள் சீரியல் பார்ப்பதில்லை. விளையாடுவதில்லை. இணையம் மற்றும் அலைபேசி தான் பொழுது போக்கு. அவர்களை அழைத்துக் கொண்டு திரையரங்குக்கு போகும் போது பையன்கள் ஹீரோவையும், பெண்கள் தறுதலையை காதலிக்கும் ஹீரோயினையும் ஆதர்சமாகக் கொள்ளக் கூடாதே என்று.

 அதற்காக அவங்களை சோட்டா பீமையா பார்க்கச் சொல்ல முடியும்? என்று கேட்டேன்.

 இல்லை, ரொம்ப விரசம் இல்லாம, தலை வலிக்கிற மாதிரி சண்டை இல்லாம லைட்டா கருத்து சொல்லுற மாதிரி படம் வந்தா எல்லோரும் போய் உட்காரலாம் என்றார்கள்.


 நானும் யோசித்துப் பார்த்தேன் தேனி மாவட்டம், விருதுநகர் சந்திப்பு, மை, பச்சை என்கிற காத்து, ஒத்தவீடு, ஒத்த குதிரை, சேட்டை தனம், சங்கர் ஊர் ராஜபாளையம், பத்திரமா பாத்துக்குங்க, சூரிய நகரம், நண்டு பாஸ்கர், மாட்டுத்தாவணி எல்லாமே மதுரையைச் சுத்தின ரவுடி படம். ஒரு பாட்டு கேக்குற மாதிரி இருக்கா? ஒரு மூஞ்சியாச்சும் நினைவுல நிக்குதா?

 பருத்திவீரனையும், சுப்ரமணிய புரத்தையும் பார்த்து நம்மளை சோதிக்கிறாங்க என்று என் மனம் என்னை அறியாமலேயே புலம்பியது.

 டிஜிடல் வந்ததுக்கான விலை இது. தலைவர் கவுண்டமணி தொழிலதிபர்களை சொன்ன மாதிரி ரியல் எஸ்டேட் பண்ணவன், வட்டி வாங்கினவேன் எல்லாம் புரட்யூசர்ன்னு வந்துடுறாங்க.

 பல குடும்பங்களின் இந்த மனநிலையே ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றிக்கும், கலகலப்புவின் வெற்றிக்கும் காரணம்.

 சென்ற ஞாயிறு கலகலப்புக்கு போயிருந்த போது 30+ பெண்களை இல்லத் தலைவிகளாக கொண்ட குடும்பங்கள் பல வந்திருந்தன. அவர்கள் மாதம் ஒரு முறையாவது படம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பை தமிழ்சினிமா கொடுப்பதில்லை என்று தான் தோன்றியது.


 திரையில் கேபிளாரின் பெயர் வந்த போது கை தட்டி மகிழ்ந்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்த்தார்கள். சாப்பாட்டு கடை எழுதியவருக்கு பேக் டிராப்பும் ஹோட்டலாக அமைந்திருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன்.


 ஓவியாவுக்கும் சாப்பாட்டுக்கும் என்ன ராசி என்று தெரியவில்லை.
 களவானியில் திண்பண்டம் வாங்க நெல் திருடுகிறார்
மன்மதன் அம்புவில் பஜ்ஜி சாப்பிடுங்கோ என்ற ஒரே ஒரு வசனம் மெரினாவில் சாப்பாடு சீதை
இதில் ஓட்டலில் பணி புரிகிறார்.

 அஞ்சலி ரம்மியமாக இருக்கிறார்

 சிவா, விமல், சந்தானம், மனோபாலா வழக்கம் போல.

 சுந்தர் சி சின்னாவில் மன்சூர், பொன்னம்பலத்தை காமெடியன் ஆக்கினார். இதில் தளபதி தினேஷ்ஷை காமெடி பீஸ் ஆக்கிவிட்டர்.

 இளவரசு மற்றும் பச்சை பெருமாளாக வரும் கான்ஸ்டபிள் சர்பிரைஸ் பேக்கேஜ்

  ரசித்த சில விஷயங்கள்

 நாய்க்கு கூகுள் என்ற பெயர்

 சந்தானம் சொல்லும் “பொண்ணுகளைப் பத்தின முக்கியமான விஷயம் எல்லாம் முறை மாமன்களுக்குத்தான் தெரியும்” வசனம். (ஒரு பதிவுக்கான அருமையான மேட்டர்)


ஒரு வருத்தம்

தோஷ நிவர்த்திக்காக அஞ்சலி ஆற்றில் இன்னும் ஒரு முறை முங்கி எந்தரித்து இருக்கலாம்.

 பல வசனங்கள் கேபிளின் பங்களிப்பு என மனதில் பட்டுக் கொண்டே இருந்தது.

 (வெட்டுப்புலி படத்தை வைத்து சந்தானம் பேசும் வசனம்) படம் நல்ல ரிலாக்சேஷன்.

 நன்றி கேபிள், நன்றி சுந்தர்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரஜினி காந்திடம் ஆட்டோகிராஃப் வாங்கிய சல்மான்கான்! ரஜினியின் பஞ்ச் டயலாக்! 'சச்சின் அடித்தால் சிக்ஸர்: ரஜினி அடித்தால் ஸ்ட்ரெச்சர்' “camera does not shoot Rajini: Rajini shoots the ...மேலும் வாசிக்க
ரஜினி காந்திடம் ஆட்டோகிராஃப் வாங்கிய சல்மான்கான்! ரஜினியின் பஞ்ச் டயலாக்! 'சச்சின் அடித்தால் சிக்ஸர்: ரஜினி அடித்தால் ஸ்ட்ரெச்சர்' “camera does not shoot Rajini: Rajini shoots the camera” ஹா..ஹா...ஹா... இது எப்படி இருக்கு!:-) ------------------------------------------ 80 வயதை நெருங்கும் இந்த முதியவருக்கு உள்ள வலிவு தற்கால இளைஞர்களுக்கு இருக்கிறதா என்பது கேள்விக் குறியே! குவாலியரில்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ஓமணக்குட்டிகளின் ஊராகிவிட்டது கோடம்பாக்கம். இங்கே தாக்குப்பிடித்துக் கொண்டிருந்த மும்பை நடிகைகளான ஸ்ரேயா, சமீராரெட்டி போன்ற அழகிகள் ...மேலும் வாசிக்க

ஓமணக்குட்டிகளின் ஊராகிவிட்டது கோடம்பாக்கம். இங்கே தாக்குப்பிடித்துக் கொண்டிருந்த மும்பை நடிகைகளான ஸ்ரேயா, சமீராரெட்டி போன்ற அழகிகள் எல்லாம் அரையிருட்டு 'குல்பி' ஐஸ்களாகி ரொம்ப காலம் ஆகிவிட்டது. இந்த நேரத்தில்தான் நீது சந்திரா போன்ற ஒன்றிரண்டு மும்பை ஜீவன்கள் இங்கே பிழைத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் ஸ்ட்ரெங்த் சேர்க்க வந்தாரோ என்னவோ, ஷர்மிளா என்ற தங்க மீன் 'மிரட்டல்' படத்திற்கு பிறகு ஓமணக்குட்டிகளை ஒதுங்க வைப்பார் என்ற நம்பிக்கை தருகிறார்.

இத்தனைக்கும் வாய்ப்பு தேடி அலைந்து, 'மிரட்டல்' படத்தின் ஹீரோயின் ஆனவர் இவர். போட்டோவை பார்த்ததும் திருப்தியா இருந்திச்சு. ரெண்டு எக்சர்சைஸ் கொடுத்து செஞ்சுட்டு வாம்மான்னு அனுப்பி வச்சேன். வேற யாராவதுன்னா திரும்பி வந்தே இருக்க மாட்டாங்க. ஆனால் ஷர்மிளா திரும்பி வந்தார். சொல்லிக் கொடுத்ததை செஞ்சார். இந்த படத்திற்காக அவர் ரெண்டு வருஷம் காத்திருந்தார் என்கிறார் படத்தின் டைரக்டரும் தயாரிப்பாளருமான மாதேஷ்.

வினய் ஹீரோவாக நடிக்கும் இப்படம் ஆக்ஷன் வித் காமெடி டைப் படமாம். இமேஜ் இல்லாத ஒரு ஹீரோ தேவைப்பட்டாரு. டக்குன்னு என் மனசுக்குள் வந்தவர் வினய்தான். தமிழ்ல ஏற்கனவே ரெண்டு படத்தில் நடிச்சுருந்தாலும், முதன் முறையாக ஆக்ஷன் ஹீரோவா அறிமுகம் ஆகுறது இதுலதான் என்றார் மாதேஷ்.... தொடர்ந்து செய்தியை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...



show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


 குறிப்பு: இந்த பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே... யார்மனதையும் புண்படுத்தும் நோக்குடனோ, எவரையும் குறிப்பிட்டோ ...மேலும் வாசிக்க
 குறிப்பு: இந்த பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே... யார்மனதையும் புண்படுத்தும் நோக்குடனோ, எவரையும் குறிப்பிட்டோ எழுதப்பட்டது அல்ல.

ஏற்கனவே நா எழுதுன "ப்ரபல பதிவர் ஆவது எப்படி?"ங்குற பதிவ
follow பண்ணி நடந்ததால, பதிவுலக விட்டே போன பல பேரு கால் பண்ணியும் மெயில் பண்ணியும்  நன்றிக்கு மேல நன்றியா சொல்லிக்கிட்டு இருக்காங்க. அது மட்டுமா "காதல் தோல்விகளை குறைப்பது எப்படி?" ங்குற பதிவை ஃபாலோ பண்ணி காதலிகள்ட செருப்படி வாங்கிட்டு break up ஆன எத்தனையோ பேரு "உங்களால தான் நா இப்ப நிம்மதியா இருக்கேன்" ன்னு  மனசார வாழ்த்துறாங்க. இதெல்லாம் என்ன பெருமையா... கடமே..........

இதோ அந்த வரிசையில் உங்களுக்காக... ஃபேஸ்புக்கில் அப்பாடக்கர் ஆவது எப்படி?  (இது தற்போது facebook ல் நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவங்களின் தொகுப்பே)

1. முதல்ல உங்ககிட்ட ஒரு கேமரா இருக்கனும்... முக்கியமான விஷயம் அதுல zoom எஃபெக்ட் நல்லா இருக்கனும். உதாரணமா உங்க கால்ல ஒரு கொசு கடிக்க உக்காருதுன்னு வச்சிக்குவோம்... அத மடார்ன்னு அடிச்சி கொன்னுட கூடாது. உடனே உங்க கேமராவ எடுங்க. அந்த கொசுவ மட்டும் zooooooooooooooooooooom பண்ணி ஒரு ஃபொட்டோ எடுத்து "என்னை இன்று கடிக்க வந்த கொசு அப்புடிங்கற கேப்ஷனோட போட்டீங்கன்னு வைங்க லைக்கு அள்ளிக்கும்.

2. அப்புறம் நீங்க Onsite la இருக்கமாதிரி (இல்லைன்னா கூட) காட்டிக்கனும்.. அதாவது உங்க profile ல லொக்கேஷன்கிற எடத்துல யூரோப்புல உள்ள எவனுக்குமே தெரியாத ஒரு ஊர போட்டுக்கனும். அது மட்டும் பத்தாது... நீங்க லெதர் ஜாக்கெட் போட்டுகிட்டு ஒரு ஒரு மரத்த கட்டி புடிச்ச மாதிரியோ, இயற்கைய ரசிக்கிற மாதிரியோ ஒரு  ஃபோட்டோவுக்கு போஸ் குடுக்கனும். (லெதர் ஜாக்கெட் மிகவும் முக்கியம் அமைச்சரே) அப்பதான் நீங்க ஆன் சைட்டுல இருக்கீங்கன்னு நம்புவாங்க.

3. கலைக்கண்ணோட எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள அப்லோடு பண்ணனும். அது என்ன கலைக்கண்ணோட எடுக்கப்பட்ட ஃபோட்டோன்னு கேக்குறீங்களா..அதாவது கேமராவ நேர வச்சி எடுத்தா அது எல்லாரும்  எடுக்குற சாதாரண ஃபோட்டோ...  அதே கேமராவ 45 degree சாய்ச்சா மாதிரி எடுத்தா அதுக்கு பேரு  photography. அதுமட்டும் பத்தாது... அந்த போட்டோவுல உங்க friend  list la உள்ள எல்லாரையும் மறக்காம tag பண்ணி விட்டுடனும்.

4. நீங்க கொடைக்கானலோ இல்லை ஊட்டியோ டூர் போனீங்கன்னா அங்க ஒரு சுமாரா ஒரு 500 போட்டோ எடுத்துருப்பீங்க... அத அப்புடியே ஃபேஸ்புக்குல பொளக்குன்னு அப்லோட் பண்ணிட கூடாது... "குப்புசாமி Uploaded 305 photos in his album kodai tour" ன்னு ஒரு நோட்டிஃபிகேஷன் வந்துச்சின்னு வச்சிக்குங்க... எல்லாரும் வெறிச்சி ஓடிருவாய்ங்க. நீங்க அப்லோட் பண்ண ஃபோட்டோக்கள்ல சைடு ஆங்கிள்ல திரும்பி நிக்கிறது, சிரிக்கிறது , மொறைக்கிறது வெக்கப்படுறது, பிஸ் அடிக்கிறதுன்னு கண்ட ஃபோட்டோக்கள்லாம் இருக்கும்... அதுல கேமரா ஷேக் ஆயி பொகை மூட்டமாவே ஒரு 50 ஃபோட்டோ இருக்கும். அத அப்புடியே upload பண்ணுவீங்க. இதே மாதிரி பண்ணிட்டு இருந்தா உங்கள எல்லாரும் unfriend பன்ண கூஅட   வாய்ப்பு இருக்கு

5. பசிக்கொடுமை, ஏழ்மை இந்த மாதிரி விஷயங்கள கண்டா நீங்க பொங்கி எழனும்.... "உதாரணமா உகாண்டா மக்கள் சாப்பாட்டிறே கஷ்டப்படுறாங்க... நம்ம ஊர்ல சினிமா காரங்க மேல பால ஊத்திகிட்டு இருக்காங்க.. " அப்புடின்னு ஒரு சைடு பசியால் வாடுற மக்களையும், இன்னொரு பக்கம் ரஜினி படத்துக்கோ அஜித் படத்துக்கோ ரசிகர்கள் பால் ஊத்துற மாதிரி உள்ள படத்தையும் மெர்ஜ் பண்ணி ஒரு ஃபோட்டோ  upload பண்ணனும்.. அதுனால நீங்க பட்டினியா இருக்கனும்னோ இல்ல பசிக்கிறவங்களுக்கு சாப்பாடு போடனும்னோ அவசியம் இல்ல. நீங்க பசிக்குதுன்னு பிச்சை கேக்குறவனுக்கு ஒரு ரூவா கூட போடாம 1000 ரூவாய்க்கு  பீஸ்ஸா... பர்க்கர்... ஸ்பிரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் ரோல் ன்னு  என்ன வேணா சாப்புடலாம். எவனுக்கும் தெரியாது.

6. அப்புறம் இந்த விஜய்,அஜித் மாதிரி கமர்ஷியல் ஹீரோக்கள பாத்தாலே உங்களுக்கு அலர்ஜி வரனும்.. அதாவது நீங்க US la தான் born and brought up மாதிரியும், only இங்கிலீஸ் படங்கள் தான் பாப்பீங்கங்குற மாதிரியும்  "இந்த தமிழ் படங்களே இப்புடித்தான்... so boring ya" அப்புடின்னும் சீனப்போடனும்...

7. அப்புறம் இந்த டி.ஆர், பவர் ஸ்டார், சாம் ஆண்டர்சன் இவங்கல்லாம் உங்க கண்ணுல மனுஷங்களாவே தெரியக்கூடாது... அவங்கள எதோ வினோதமான ஜந்துக்கள் மாதிரியே நீங்க ட்ரீட்  பண்ணனும்.. அவங்கள பத்தின போஸ்ட் எல்லாத்துலயும் "so funny ya"  "funny guys"  இந்த மாதிரி கமெண்ட்ஸ் மட்டுமே போடனும். "funny" ங்கற வார்த்தை மிக முக்கியம்.

8. உங்க ஒரிஜினல் பேர முடிஞ்ச அளவு உபயோகிக்க கூடாது...  கத்திக்குத்து கந்தன், பெட்டி பெருமாளு, வெட்டு வேலு, பாக்கு ரவின்னு ரவுடிங்க எப்புடி அடைமொழியோட  இருக்காங்களோ அதே மாதிரி உங்க பேருக்கு முன்னாடியோ பின்னாடியோ எதாவது  ஒரு அடைமொழிய நீங்களே சேத்துக்குங்க.. உதாரணமா உங்க பேரு அசோக்குன்னா  அத டான் அசோக்குன்னும் அசாருன்னா  அத அசால்டு அசாருன்னும் மாத்தி வச்சிக்கலாம்.. காலப்போக்குல அதுவே உங்களுக்கு நிரந்தரமான பேராயிடும்.


9. அப்புறம் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி பண்ணனும்.. அது எப்புடி பண்றது? கைக்காசு எதும் போயிருமோன்னு பயப்படாதீங்க.. அது ரொம்ப ரொம்ப ஈஸி.. ஒரு குழந்தை சோகமா   இருக்கமாதிரி ஒரு ஃபோட்டோ... அதுக்குள்ள, இந்த குழந்தை எலும்பு புற்று நோயால் அவதிப்படுகிறது... அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் ரூபாய் தேவை..Facebook accepted to give 10 paise per each  like... please like and save the child" அப்புடின்னு ஒரு ஃபோட்டோவ எவனாவது share  பண்ணிருப்பான்.... அதுக்கு மத்தவங்க மாதிரியே ஒரு லைக்போட்டு முடிஞ்சா share பண்ணி விடுங்க.. அவ்ளோதான் கொழந்தைய காப்பத்தியாச்சி... மத்ததெல்லாம் facebook பாத்துக்கும்.

10. எல்லார்கிட்டயும் பாசமா இருக்கனும்... நேர்ல பாத்தா நீங்க சில பேர்ட்ட மூஞ்சி குடுத்து கூட பேசமாட்டீங்க...முன்னாடி விட்டு பின்னாடி அசிங்க அசிங்கமா கூட திட்டிருப்பீங்க.. ஆனா ஃபேஸ்புக்ல அப்புடி வெளிப்படையா எல்லாம் பேசக்கூடாது.. "கலக்குங்க மச்சி" "சூப்பர் மச்சி" "ஆல் த பெஸ்ட் மச்சி" இப்புடிதான் பேசி பழகனும்.. குறிப்பா பொண்ணுங்களுக்குள்ள நிறைய கொழாயடி சண்டை வரைக்கும் நடந்துருக்க்கும்.. ஆனா ஃபேஸ்புக்ல "hi dear" "you are looking awesome dear" "have fun dear" "u rocking  dear" இந்த மாதிரி தான் பேசனும். dear ங்கறது பொண்ணுங்களுக்கு தான்... பசங்க அவசரப்பட்டு யூஸ் பண்ணி தோஸ்தானாவ  ஃபார்ம் ஆயிராதீங்க..

11. அப்புறம் சில ஃபோட்டோக்கள் upload பண்ணனும்னு போது உங்களுக்கு அதுக்கு  என்ன description குடுக்குறதுன்னு தெரியாது.... அந்த மாதிரி சமயங்கள சமாளிக்க ஒரு ஆயுதம் இருக்கு... "how many likes?" அப்புடின்னு போட்டு விட்டுடனும்....  சில தாவர உண்ணிகள் அதுக்கும் லைக் போடும்... ஆன சில ஊண் உண்ணிகள் கெட்ட வார்த்தைல திட்டுறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு. அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

12. உங்க ஸ்டேடஸ்க்கு likes வாங்குறது ரொம்ப முக்கியம்... சில சமயம் என்ன status போடுறதுண்ணே தெரியலையா...ஒரு சூப்பர்  ஐடியா இருக்கு...

If you find your ஜட்டி size in the below numbers.. like it.. அப்புடின்னு போட்டு கீழ

      "75, 80, 85, 90, 95, 100, 110"

இப்புடி போட்டுருங்க... இதுக்குள்ள எல்லாரும் வந்துதான் ஆகனும்... கண்டிப்பா லைக் போட்டு தான் ஆகனும்.. அப்ப கோவணம் கட்டுறவங்கள கவர் பண்ண என்ன பண்றதா? அட கோவணத்துக்கெல்லாம் சைஸ் இல்லப்பா... free size தான்.

14. ஸ்டேடஸ் update ரெம்ப ரெம்ப முக்கியம்.. பக்கத்து வீட்டு அக்கா உங்கள சர்ஃப் வாங்கிட்டு வர  சொன்னிச்சின்னி வச்சிக்குங்க உடனே பொசுக்குன்னு போயிற கூடாது... வந்து facebook ல "surf வாங்க போறேன்"னு  status update பண்ணிட்டு தான் போகனும்.. ஏஞ்சொல்றேன்னா நீங்க சொல்லாம கொல்லாம சர்ஃப் வாங்க பொய்ட்டீங்கன்னு வச்சிக்குங்க உங்க ஆடியண்ஸ் எல்லாம்  எங்க பொயிட்டீங்க எங்க பொய்ட்டீங்கன்னு தவியா தவிச்சி போயிருவாங்கல்ல.. அது மட்டும் இல்ல நீங்க உச்சா போறதுக்கு முன்னால, கக்கா போறதுக்கு முன்னால கூட ஸ்டேடஸ் அப்டேட் பண்ணிட்டு தான் போகனும்...



15. அதே மாதிரி நீங்க உங்க location la பாப்ப நாயக்கம் பட்டி ன்னு போட்டு வச்சிருப்பீங்க.. திடீர்னு அலுவலக பணிக்காக ரெண்டு நாளூ எருமைநாயக்கம் பட்டிக்கு போறீங்கன்னு வச்சிக்குவோம் உடனே லொக்கேஷன் மாத்திரனும்... ஏன்னா உங்கள பாக்க வர்ற உங்க ரசிகர்கள், பாப்பநாயக்கம்பட்டிக்கு போய் ஏமாந்துரகூடாது பாருங்க...

16. அப்புறம் இந்த பொண்ணுங்கள கண்டா உங்களுக்கு சுத்தமா புடிக்கவே கூடாது.. ச்ச ச்ச... வெளியில மட்டும் தான்...உதாரணமா ஒரு காதல் தோல்வி பாட்டு வந்துச்சின்னு வச்சுக்குங்க அதுல  பொண்ணுங்கள தாக்குற மாதிரி உள்ள ரெண்டு லைன அப்புடியே லபக்குன்னு கவ்வி  உங்க ஸ்டேடஸ்ல போட்டுக்கணும்.... அப்பதான் நீங்க ரவுடியா ஃபார்ம் ஆக முடியும்... உங்க
நண்பர்கள் வட்டமும் பெருசாகும்.. ஏன்னா இந்த குடிகாரய்ங்களும், பொண்ணுங்களால பாத்திக்கப்பட்டவிங்களூம்  தான் உடனே friend  ஆயிருவாய்ங்க. நீங்க பல பொண்ணுங்க கிட்ட செருப்படி வாங்குன அப்புறம் தான் அந்த state ku  போனீங்கங்குற உண்மை யாருக்கும் தெரியக் கூடாது.

17. அப்புறம் இந்த ஆடு வெட்டுறவிங்க, கோழி வெட்டுறவிங்க, மரத்த வெட்டுறவிங்களையெல்லாம் "பாவிங்க" "மனிதாபிமானம் இல்லாதவிங்க"
"இதுங்கள்ளாம் என்ன ஜென்மம்" "இரக்கமில்லாதவர்கள்" ன்னு எப்புடி எப்புடி முடியுமோ அப்புடியெல்லாம் திட்டனும்.. ஏன்னா வெட்டுறங்கதான் குற்றவாளிங்க.. என்ன... நம்ம ஆடு கோழியெல்லாம் திங்கலைன்னா அவங்க ஏன் வெட்ட போறாங்கன்னு கேக்குறீங்களா? அதெல்லாம் கேட்க கூடாது... அவங்க பண்றது தப்பு தான்.. இதயெல்லாம் கேட்டா நீங்க அப்பாடக்கர் ஆக முடியாது... 

என்ன ஓகே வா..வெற்றியோட வாங்க

இவ்வாறாகச் செய்து வந்தால் வருடத்தின் இந்த நாள் மட்டுமல்லாமல் எந்த நாளும் இனிய நாளாகவே அமையும்.

எண்ணம் : நண்பன் அசால்ட்டு அசார்
கருத்துக்கள் : நண்பன் கார்த்தி
தொகுப்பு : முத்துசிவா



show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ஒரு மிக எளிதாக, நாம் நடைமுறை வாழ்க்கையில் பார்க்கும் கதாப்பாத்திரங்களையும், நாளிதழ்களில் படிக்கும் செய்திகளையும் கொண்டே உலகத்தரமான படங்களைக் கொடுக்க முடியும் என்பதை Children of Heaven, ...மேலும் வாசிக்க
ஒரு மிக எளிதாக, நாம் நடைமுறை வாழ்க்கையில் பார்க்கும் கதாப்பாத்திரங்களையும், நாளிதழ்களில் படிக்கும் செய்திகளையும் கொண்டே உலகத்தரமான படங்களைக் கொடுக்க முடியும் என்பதை Children of Heaven, White balloon போன்ற இரானியப் படங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். இதை தமிழிலும் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


உதயநிதி ஸ்டாலின் நடிக்க ஆசைப்படுறாரு, நடிக்கப் போறாருனு கேள்விப்பட்டதும் உங்களுகெல்லாம் எப்படி இப்படி ஒரு ஆசை வருதுனு  தெரியலை எனக்கு ரொம்ப சிரிப்பாத்தான் வந்தது. ஏன் இந்த ...மேலும் வாசிக்க
உதயநிதி ஸ்டாலின் நடிக்க ஆசைப்படுறாரு, நடிக்கப் போறாருனு கேள்விப்பட்டதும் உங்களுகெல்லாம் எப்படி இப்படி ஒரு ஆசை வருதுனு  தெரியலை எனக்கு ரொம்ப சிரிப்பாத்தான் வந்தது. ஏன் இந்த நடிக்கிற ஆசை யாரையும் விடமாட்டேங்கிதுனு அடிக்கடி  எழும் கேள்விதான் இது.

சரி, உதய நிதிட்ட பணம் இருக்கு, ஏதாவது "இன்கம் டேக்ஸ்" கணக்குக் காட்ட இந்தத் தோல்விப்படம் உதவும்னு நான் நெனைக்கலைனு சொன்னால் அது பச்சைப் பொய்!

போதாக்குறைக்கு, அம்மா சிறுபிள்ளைத்தனமாக, ஓரளவுக்கு தகுதியுள்ள  இந்தப் படத்துக்கு கவனமாக வரிவிலக்கும் கொடுக்காமல் விட்டுருச்சுனு வேற சொன்னாங்க. அம்மா ஆட்சியில் "அய்யா பேரன்" படம் வந்து, அது ஓடி, அட போங்கப்பா!

நான் இன்னும் இந்தப் படம் பார்க்கவில்லை! ஆனால் காமெடி நல்லாயிருக்கு, படம் ஹிட்டுனு சொன்னாங்க! இனிமேல்தான் பார்க்கணும். சரி ஓரளவுக்கு நல்லாப்போகும்னு சொன்னதும், ஏதோ பொழச்சுட்டாங்க, போட்ட காசை எடுத்துப்புடுவாங்கனு நெனச்சா..

இன்னைக்கு சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் கலக்சன் பார்த்தால் 15.3 கோடியில் வந்து நிக்கிது! 

நண்பன் ஒரு 7.5-8  கோடி கலக்ட் பண்ணுச்சு!

சிவாஜி 12 கோடி போல!

எந்திரனே 16 கோடியோ என்னவோதான் வசூல் செய்தது.

உதய நிதி நடிச்ச ஒரு கல் ஒரு கண்ணாடி, இப்போவோ 15 கோடியிலே வந்து நிக்கிது, இன்னும் ஒரு மூனு வாரத்துல 20 கோடிக்குப் போயி, சென்னையில் #1 பாக்ஸ ஆஃபிஸ் கலக்சன் இடத்தை பிடிச்சுடும் போல!

வச்சுல் மாமழைஉயால், கரகாட்டக்காரன், சின்னத்தம்பி போன்ற பட வரிசையில் இந்தப் படம் இடம் பெறுகிறது!


Ranking based on Chennai Box Office Collections from
May 11th 2012 to May 13th 2012

Oru Kal Oru Kannadi

Cast: Udhayanidhi Stalin, Hansika Motwani, Santhanam 
Direction: M Rajesh
Music: Harris Jayaraj
Production: Udhayanidhi Stalin
Review
Trailer
Music Review
Gallery

This film is a hat-trick win for director Rajesh. Santhanam has proved it again and Udhayanidhi can be proud of a decent debut.

Trade Talk:
It has been 25 days and OKOK continues to make merry at the box office.

Public Talk:
Rajesh, Santhanam and Udhayanidhi make a great team and keep the laughs coming.

No. Weeks Completed : 4
No. Shows in Chennai over this weekend : 300
Average Theatre Occupancy over this weekend : 75 %
Collection over this weekend in Chennai: Rs. 8,507,616
Total collections in Chennai: Rs. 15.09 Crore
Verdict: Super Hit




 



     
 
Ranking based on Chennai Box Office collection from the following areas:
 
     
 
Anna Saalai, Adyar, Ambattur, Aminjikarai, Ashok Nagar, Avadi, Ayanavaram, Chrompet, Egmore, Injambakkam, Karapakkam, Kilpauk, Kolathur, Koyambedu, Minjur, Moolakadai, Mount Road, Mylapore, Navalur, Perambur, Purasaiwakkam, Redhills, Royapet, Royapuram, Saidapet, T Nagar, Thiruvanmiyur, Tondiarpet, Vadapalani, Villivakkam, Virugambakkam, West Mambalam
 



Sorurce:  http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies-may-14/oru-kal-oru-kannadi.html

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்ல எந்திரன் கலக்சனை, கமலால உடைக்க முடியலை, விசையால முடியலை ஆனால், உதய நிதி ஸ்டாலினுடைய ஒரு கல் ஒரு கண்ணாடி உடைத்துவிட்டது. இதெப்படி இருக்கு?

I am really shocked!!!

எல்லாம் நேரம்தான்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நம் வாழ்க்கையில் இதுவரைக்கும் எத்தனை ஹீரோக்களை கடந்து வந்திருக்கிறோம்? அப்பாவில் ஆரம்பித்து பிடித்த நடிகரில் இருந்து எத்தனையோ ஹீரோக்கள் நம் வாழ்க்கையில் வருகிறார்கள், இருக்கிறார்கள். சினிமா ஹீரோக்களைப் ...மேலும் வாசிக்க
நம் வாழ்க்கையில் இதுவரைக்கும் எத்தனை ஹீரோக்களை கடந்து வந்திருக்கிறோம்? அப்பாவில் ஆரம்பித்து பிடித்த நடிகரில் இருந்து எத்தனையோ ஹீரோக்கள் நம் வாழ்க்கையில் வருகிறார்கள், இருக்கிறார்கள். சினிமா ஹீரோக்களைப் பற்றியும், சினிமாவின் அசாதாரண ஹீரோக்களைப் பற்றியும், அன்றாட வாழ்க்கை ஹீரோக்களாகிய உங்களையும் என்னையும் பற்றிய குறிப்புதான் இந்த பதிவு!பொதுவாக அப்பா, ஆசிரியர் போன்ற நிஜவாழ்க்கை ஹீரோக்களால்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


திரைவிமர்சனம்




வழக்கு எண் : 18/9


நொந்தகுமாரன்




Enemy of the State [1998]


ஹாலிவுட்ரசிகன்


Chronicle [2012]


ஹாலிவுட்ரசிகன்





ராட்டினம்


சங்கர் நாராயண் @ Cable Sankar




வழக்கு எண் :18/9


சங்கர் நாராயண் @ Cable Sankar